Wednesday, December 23, 2009

சாம்பார் சாதம்

தேவையான பொருள்கள்:-

பொன்னி அரிசி – 1 கப்

காய்கறி – 1/4 கப் (முருங்கைக் காய், கத்திரிக்காய், பூசணிக்காய், காரட், முள்ளங்கி) இவற்றில் ஏதாவது 2 எடுத்துக் கொள்ளவும்

துவரம் பருப்பு – 1/2கப்

சின்ன வெங்காயம் – 1/4 கப்

நாட்டு தக்காளி – 1/4 கப்

பச்சைமிளகாய் – 2 நம்பர்

கொத்தமல்லி இழை – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

புளி தண்ணீர் – 1/4கப்

சாம்பார் பொடி – 1 ஸ்பூன்

சோம்பு, சீரகம், கடுகு, உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்

பெருங்காயத் தூள் – சிறிதளவு

நெய் – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

  • முதலில் குக்கரில் அரிசி, துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கொத்தமல்லி இழை, காய்கறி மற்றும் சிறிது நெய் விட்டு 3 விசில் வரும் வரை வேக விடவும்.
  • பின்பு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் சோம்பு, சீரகம், பெருங்காயத் தூள், உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  • நன்கு வதக்கியவுடன் புளித்தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து 1கொதி வந்தவுடன் குக்கரில் வேகவைத்த சாத கலவையை இதனுடன் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
  • பின்பு மேலாக கொத்தமல்லி இழை, நெய் விட்டு கிளறி சுடாக பரிமாறவும்.
  • சுவையான சாம்பார் சாதம் தயார்.

No comments:

Post a Comment