Wednesday, December 23, 2009

கருவளையம் மறைய…

ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை என பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் கருவளையத்திற்கு நிச்சயம் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். மற்ற காரணங்களால் ஏற்படும் கருவளையத்தை போக்க இதோ சில டிப்ஸ்…

*தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் மஞ்சளை குழைத்து, கண்களை சுற்றி பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து கடலை மாவால் கண்களைக் சுற்றி கழுவ கருவளையம் மறையும்.

*வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும். வெள்ளரி சாற்றிற்கு பதிலாக வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.

*பச்சை உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களை சுற்றி தடவி வர கருவளையம் மறையும்.

*தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதை தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் குணம் தெரியும்.

*வெள்ளரி சாறுடன் பன்னீர் கலந்தும் தடவலாம். ஒரு நளைக்கு இரு முறை செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

*பால் பவுடரை தண்ணீர் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களை சுற்றி பூசலாம். அதே போல் பாலாடையுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும் வரை வைத்திருக்காமல், சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.

* ஜாதிக்காயை அரைத்து கண்களை சுற்றி தடவி கொண்டு சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர கருவளையம் மறைந்து விடும்.

*போதிய அளவு தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகும். இதை தவிர்க்க, தினசரி 6 மணி நேரமாவது தூங்குவது அவசியம்.

பொருத்தமான மேக்கப்

கூந்தல்:

* பெண்ணோ, ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்தும் சிறப்பு கூந்தலுக்கு உண்டு. ஆனால் பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாது பலருக்கு. இதனால், நீண்ட அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக் கொள்ளும் பெண்கள் அதிகம்.

* முடி சின்னதாக இருக்கே என்று கவலைப்படாமல் நம் முடி எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்துகு கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால் எந்த மாதிரியான சிகை அலங்காரமும் அழகாகத்தான் இருக்கும். இருந்தாலும் கண் அமைப்பு, முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்துவிதமாக கொண்டை, பின்னல்களை போட்டுக்கொள்ளுங்கள்.

குட்டை முடி:

* உருண்டை முகம்: கோணல் வகிடு எடுக்காமல் தூக்கிவாரி கொள்ளலாம்.நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.

* நீளமுகம்: ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கம் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும். * அகலமான முகம்: முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும் அளவுக்கு வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.

* அகலமான நெற்றி: முன்பக்க முடியை சற்று எடுத்து ஃப்ரிஞ்ச் எனப்படும் ஹேர்கட் பண்ணலாம். நெற்றி முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்.

* குட்டை கழுத்து: குதிரைவால் கொண்டை பொருத்தும்.

* தாடை நீண்ட ஓவல் வடிவ முகம்: முடியை நோக்கி “சி” வடிவமான வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவதுபோல் அமையுங்கள் அழகாக, வித்தியாசமாக இருக்கும்.

நீளமான முடி:

* பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக அமையும்.

* ஃப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால் முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.

* முடியை தூக்கிவாரி கொண்டையின் மேல் ஃப்ரென்ச் நாட் போடலாம். கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டாலும் அழகுதான்.

* நீளக்கழுத்து: காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.

* மீடியம் கழுத்து: பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக தெரியும். கழத்தை ஒட்டி வகிடெடுத்து சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.

* மிக நீண்ட கழுத்து: கழுத்தை ஒட்டினர்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போண்ட கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.

* உருண்டைமுகம்: உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.

* ஓவல் முகம்: காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக்கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.

* சதுர முகம்: தளர ( காதை மூடிய பின்னல் ) , கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்கவிட மேலும் அழகாக இருக்கும். * குண்டானவர்கள்: கொண்டை வேண்டாம். பின்னல் நல்லது.

* உயரமானவர்கள்: கொண்டை வேண்டாம், ஆசையாக இருந்தால் சற்று தழைத்து போட்டுக் கொள்ளவும்.

* குள்ளமானவர்கள்: சற்று உயர தூக்கி கொண்டை போடுங்கள்.

* எல்லோருமே கொண்டைவலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை( ஓவராக அல்ல ) ஒட்டி வைத்துக்கொண்டால் விஷேங்களுக்கு செல்லும் போது உங்களை ரிச்சாக காட்டும். பாராட்டு கிடைக்கும்.

பொட்டு:

* உடைக்கேற்ற டிசைன் பொட்டு தே நிறத்திவ் தேர்ந்தெடுங்கள். பொதுவாக மெரூன் பொட்டு எல்லா உடைகளுக்கும் பொருந்தும்.

* உருண்டை முகம்: வட்டம், உயரம் என எல்லா பொட்டும் பொருந்தும். சிறிய நீட்டப் பொட்டு சூப்பராக இருக்கும்.

* குறுகிய நெற்றி: சிறிய டிசைன் பொட்டுகள் பொருந்தும்.

* நீளமுகம்: கலர் சாந்தினால் அகல டிசைன் வரைந்து கொள்ளலாம்.

* சதுர முகம், பரந்த நெற்றி: நீள டிசைன் பொட்டுகள் வைக்கலாம்.

* ஜீன்ஸ் அணிந்தால் கூட பாம்பு போன்ற வளைந்த, நீள டிசைன் பொட்டுகள் எடுப்பாக இருக்கும்.

பெண்கள் தங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற சிறிய ரோமங்களை நீக்க பெண்கள் தங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற சிறிய ரோமங்களை நீக்கினால் முக அழகு கூடும். அதற்கான அசத்தல் ஐடியா,

இதோ! முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை, சோளமாவு மூன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றையும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கிடைக்கும் கலவையை முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தில் பூசிக்கொள்ள வேண்டும். கலவை காய்ந்தபின் அதனை பதமாக நீக்க வேண்டும். அப்போது கலவையுடன் சேர்ந்து ரோமங்களும் உதிர்ந்துவிடும். தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை இப்படியே செய்துவந்தால் ரோமங்கள் இல்லாமல் சவழவழ முக அமைப்பை பெறலாம். நகத்துக்குச் சாயம்

நகங்களை நீளமாக வளர்ப்பதுதான் இன்றைய நாகரிகம் என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது. விரலின் விளிம்புக்கும் அதிகமாக நகங்களை வளரவிடுவது அவ்வளவு நல்லதல்ல. சாதாரணமாண எந்தவித வேலைக்கும் நீளமான நகங்கள் இடைஞ்சலாகவே இருக்கும். மேலும் அது பிய்ந்தும் உடைந்தும் தொல்லை தரும். நடுவில் பிரிந்து அல்லது அரைகுரையாக உடைந்து மூளியாகக் காட்சியளிக்கும் நகம் விரலின் அழகையே கெடுத்துவிடும்.

எனவே அதிகமாக நகம் வளர்க்காதீர்கள். நகம் வெட்டியை பயன்படுத்தி குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை வெட்டிவிடுங்கள். நகத்தை நீக்குவதற்கு பல்லால் கடிப்பதை தவிர்க்கவும். அது அசிங்கமான பழக்கம் என்பதை விட தேக நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

நகங்களுக்கு சாயம் பூசி அழகுபடுத்துவது தொன்று தொட்டு வரும் பழக்கமாகும். சாதாரணமாக நாம் இதற்கு மருதாணி இலைகளையே பயன்படுத்துகிறோம்.

மருதாணி அரைக்கும் போது நன்கு வெண்ணெய் போல் அரைப்பது சிறந்ததாகும்.
அப்போது அது நகங்களில் நன்றாக பற்றும். மருதாணி இலையை அரைக்கும் போது சிறிதளவு களிப்பாக்கை சேர்த்து அரைப்பது சாயம் நன்கு ஏற உதவும்.

விரல்களை நன்கு சுத்தம் செய்த பின்னரே அவற்றிற்கு அழகு செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

இது நகத்தில் சிவப்பு நன்கு ஏற உதவுவதோடு மருதாணி கலையாமல் இருக்க பயன்படும்.

நகங்களுக்குப் பூசிய பின்னர், உள்ளங்கைகளில் அழகிய வேலைபாடுகள் அடங்கிய, கவர்ச்சி பொருந்திய “டிசைன்களை” மருதாணியைக் கொண்டு இடலாம்.

உள்ளங்கை அளவே உள்ள அட்டைகளை எடுத்துக் கொள்ளவும். அதில் அழகான டிசைன்களை வரைந்து, நடுவில் வெட்டி எடுக்கவும்.

பின், டிசைன்கள் வெட்டப்பட்ட அட்டையை உள்ளங்கையில் வைத்து, அதன்மீது மருதாணி விழுதை நன்கு பரப்பி அதன் இலையை வைத்து கட்டிடவும்.

மறுநாள் மருதாணியை எடுத்துவிடும் போது கைகளில் அழகான டிசைன்கள் அமைந்து விடும். உள்ளங்கைகளைச் சுற்றிப் பொட்டுகள் வைப்பதும் உண்டு.

மருதாணியைத் தவிர, பலரகச் செயற்கைப் பூச்சுகளைப் பலர் உபயோகிப்பதுண்டு. சிவப்பில் பல ரகங்களில் இது கிடைக்கும் இயற்கை நிறத்திலும் உண்டு. இயற்கை நிற பூச்சு நகத்திற்கு தனி நிறம் கெடாது. ஒருவித பளபளப்பை மட்டும் உண்டு பண்ணி மெருகேற்றி விடுகிறது.

பொதுவாக இவ்வகை இயற்கை நிறப்பூச்சைப் பயன்படுத்தி நகங்களுக்கு பொலிவுபண்ணுவது ஆடம்பரமற்ற அமைதியான அழகை தரும்.

ஒவ்வொரு தடவையும் நகப்பூச்சை பயன்படுத்தும் போதும் பழைய பூச்சை அகற்றிவிடுவது மிகமிக அவசியம். காய்ந்த பழைய பூச்சை எடுத்துவிட கத்தியைக் கொண்டோ அல்லது வேறு ஏதும் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தியோ நகத்தை சுரண்டுவது நல்லதல்ல.

அதற்குறிய “பாலிஸ் ரிமூவரையே” பயன்படுத்த வேண்டும். பழைய பூச்சைக் களைந்து விரல்களை நன்கு சுத்தப்படுத்திப் பின்னர் திரும்பவும் பூசவும்.

கைகளுக்கு பயன்படும் இந்த பூச்சுகளே பாதங்களுக்கும் பயன்படக்கூடியவை.

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆடை அலங்காரம்

வீட்டுல் அணியும் உடைகள் பெண்கள் வீட்டில் இருக்கும் போது உடை அணியும் விஷயத்தில் அக்கறை செலுத்த வேண்டியது இல்லை என சில பெண்கள் நினைக்கிறார்கள். இது தவறான மனோபாவமாகும். வீட்டில் இருப்பவர்கள் நம்மை சார்ந்தவர்களாகவே இருப்பினும் வீட்டுச் சுழ்நிலைக்கு ஏற்ப உடை அணிவது வீட்டில் உள்ள ஆண்களுக்கு நிறைவாக இருக்கும். வீட்டில் இருக்கும் போது பகட்டாக உடை அணிவது தேவையில்லை என்றாலும் வீட்டிற்கு ஏற்ற மாதிரி பாந்தமாக உடை அணிவது அவசியமே.

அதிக உடையும் குறைந்த உடையும்

பெண்கள் பொதி சுமப்பது போல உடல் முழுவதும் சுற்றிய நிலையில் அதிகமான அளவில் உடை அணிவது அழகைக் கெடுக்கும். அதற்காக அங்கங்கள் தெரியும் அளவுக்கு மிகவும் குறைவான ஆடைகளை அணியக் கூடாது.

கடைத் தெருவுக்குப் போகும்போது

கடைத்தெரு மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது இலேசான நிறம் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது சுழ்நிலைக்கு ஏற்ப பாந்தமாக இருக்க வேண்டும்.

புடவைக்குப் பொருத்தமான சோளிகள்

பெண்கள் அணியக்கூடிய சோளிகளின் கைகளிலும், கழுத்திலும் லேஸ்களை வைத்துத் தைத்துக் கொண்டால் அவை என்ன வண்ணத்தில் புடவை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும்.

அலுவலகம் செல்லும் பெண்கள் அணியும் ஆடை

அலுவலங்களுக்கோ, பள்ளி, கல்லூரிகளுக்கோ செல்லும் பெண்கள் மிகவும் பகட்டாகவும் கண்களைப் பறிக்கும் விதத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ஒரேடியாக மோசமான ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என கருதிவிடக்கூடாது. கண்ணியமான தோற்றத்தை அளிக்கக்கூடிய சுழ்நிலைக்கு ஏற்ற உடையை அணிந்து செல்வது மிகவும் அவசியம்.

ஒல்லியான பெண்களுக்கு உடைகள்

மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது. சோளியின் கைகள்கூட மிகவும் பிடிப்பாக இல்லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது.

புடவையின் அமைப்பும் உருவத்தோற்றமும்

பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும்.
உதாரணமாக பெண்கள் அணியக்கூடிய புடவையில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் அமைந்தால் உயரமான பெண்கள் குள்ளமாக இருப்பது போன்ற பிரமைபார்பவர்களுக்கு தோன்றும். புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயராமாக இருப்பது போல காட்சி தருவார்கள்.

கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்றால்

கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது மிகவும் நெருக்கமாக கட்டம் போடப்பட்ட மிகவும் அழுத்தமான சாயம் கொண்ட கைத்தறி சேலைகளை உடுத்திச் சென்றால் பாந்தமாக இருக்கும்.

பெண்களுக்கு உடற்பயிற்சி


உடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது என்றே சொல்லலாம்.

நாம் அழகாகவே இல்லை,குண்டாக வேறு இருக்கிறோம். நம்மால் அழகாகத் தோற்றம் அளிக்க முடியாது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள், எப்போதுமே ‘ பாஸிடிவ் அப்ரோச்’ தான் எல்லாவற்றிலும் நல்ல பலனை அளிக்கும்.

நம் உடலில் எங்கெங்கு குறையிருக்கோ அதனை நாம் நமது உடற்பயிற்சியின் மூலமும்,மிதமான, அதே சமயம் நாகரிகமான ஒப்பனையின் மூலமும் நிவர்த்தி செய்ய இயலும்.

உடற்பயிற்சி செய்வதனால் அலைபாய்கிற மனம் ஓர் கட்டுக்குள் அடங்குகிறது.இரத்த ஓட்டம் சீராகி,புத்துணர்வு கிடைக்கிறது. உடற்பயிற்சியினால் உடல் கட்டுக்கோப்பாக ஆகிவிட்டாலே மகிழ்ச்சிதான்.இந்த மகிழ்ச்சி தன்னம்பிக்கையை அளித்து அழகூட்டுகிறது.

வியர்வை வெளிப்படுகிற மாதிரி பயிற்சி செய்தாலே முகம் பொலிவு பெற ஆரம்பித்து விடும்.

பயிற்சி செய்து விட்டு விட்டால் குண்டு பெண்மணி ஆகிவிடுவோம் என்று பயப்படும் அவசியம் இல்லை. என்ன இரண்டு கிலோ அதிகமாகும் அவ்வளவுதான்.மீண்டும் நீங்கள் தொடர்ந்தால் சரியாகி விடும்.

நமது உடல் வாகு, முகத்திற்கேற்ற தலையலங்காரம் ஒப்பனையில் சிறிது அக்கறை இருந்தாலே போதும் நாமும் அழகிதான். லிப்ஸ்டிக் கலர்,முகப்பவுடர் போன்றவை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

உடையைப் பொறுத்தவரை அனைவருக்குமே ‘ ட்ரெஸ்ஸிங் சென்ஸ் ‘ இருப்பது அவசியம்.அனைவருமே ஆடை வாங்குகிறார்கள்.உடுத்திக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு சிலரே ஆயிரம் பேருக்கு நடுவிலும் அழகு தேவதையாக வலம் வருவார்கள். காரணம் அவர்களிடம் அனைத்தையும் மீறிய ஒரு’ க்ரியேட்டிவ்சென்ஸ்’ இருக்கும்.அதுதான் அவர்களது ‘ஸ்பெஷாலிட்டியே’.

நம்மாலும் அந்த க்ரியேட்டிவிட்டியை வளர்த்துக் கொள்ள முடியும். எதற்குமே முயற்சிதான் காரணமாகிறது. முயற்சியுடையோர்… அதே தான்.

உயரமானவர்களுக்கு கட்டம் போட்டது போலும் , பெரிய பூக்களை உடையது போன்றும் உள்ள ஆடைகள் அழகான தோற்றத்தையும், மிதமான உயரமானவர்களுக்கு அவர்கள் நீண்ட வாகில் கோடுகள் போட்ட ஆடைகளைத் தேர்ந்தெடுப்பார்களேயானால் இன்னும் உயரமாக இருப்பது போன்ற தோற்றம் தரும்.

குள்ளமாக உள்ளவர்களுக்கு நீள வாக்கில் கோடு போட்டதும், சிறு சிறு பூக்களை உடைய ஆடையே அவர்களை உயரமாகக் காண்பிக்கும். குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் போட்டதற்கு முன்னுரிமை அளித்தல் அவர்கள் மிகவும் குள்ளமாகவும், குண்டாகவும் இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும்.

கலர் விஷயத்திலும் அப்படியே. கலராக இருப்பவர்களுக்கு லைட்,டார்க் என்று எந்த கலர் ஆடையை வேண்டுமானாலும் அவர்கள் கட்டி அசத்த முடியும்.

மாநிறமாகவும், கருப்பாகவும் உள்ளவர்கள் கலர் விஷயத்தில் கொஞ்சம் கவனம் வைக்க வேண்டும். மிகவும் டார்க் கலரையோ, மிகவும் லைட்டான கலரையோ தெரிவு செய்தல் கூடாது. மிதமான கலராகப் பார்த்து உடுத்தினால் அவர்களும் நல்ல நிறமாக தோற்றம் அளிக்க இயலும்.

உயரமானவர்கள் மெல்லிய ஸ்லிப்பரும், குள்ளமானவர்கள் ஓரளவு ஹீல்ஸ் உள்ள செருப்பையும் அணியலாம். அதிகப்படியான ஹீல்ஸ் முதுகு வலி,இடுப்பு வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தி விட்டு விடும்.

மளிகை சாமான்களின் ஆங்கிலபெயர்

அவரை – Beans – பீன்ஸ்

இஞ்சி – Ginger – ஜின்ஜர்

உப்பு – Salt – ஸால்ட்

உளுந்து – Black Gram – பிளாக் கிராம்

பூண்டு – Garlic – கார்லிக்

எண்ணெய் – Oil – ஆயில்

ஏலக்காய் – Cardamom – கார்டாமாம்

கசகசா – Poppy – பாப்பி

கடலை – Bengal Gram – பெங்கால் கிராம்

கடுகு – Mustard – முஸ்டார்ட்

கம்பு – Millet – மில்லட்

கஸ்தூரி – Musk – மஸ்க்

குங்குமப்பூ – Saffron – சஃப்ரான்

கேழ்வரகு – Ragi – ராகி

கொள்ளு – Horse Gram – ஹார்ஸ் கிராம்

கோதுமை – Wheat – வீட்

சீரகம் – Cumin – குமின்

தனியா – Coriander – கோரியண்டர்

தயிர் – Curd – க்கார்ட்

துவரை – Red Gram – ரெட்கிராம்

கடலை எண்ணெய் – Gram Oil – கிராம் ஆயில்

தேங்காய் எண்ணெய் – Cocoanut Oil – கோக்கநட் ஆயில்

நல்லெண்ணெய் – Gingili Oil – ஜின்ஜிலி ஆயில்

நெய் – Ghee – கீ

நெல் – Paddy – பாடி

அரிசி – Rice – ரய்ஸ்

பச்சைப்பயறு – Green Gram – கீரின் கிராம்

பாசிப்பருப்பு – Moong Dal – மூனிங் தால்

கடலைப்பருப்பு – Gram Dal – கிராம் தால்

பன்னீர் – Rose Water – ரோஸ் வாட்டர்

பால் – Milk – மில்க்

பால்கட்டி – Cheese – ச்சீஸ்

புளி – Tamarind – டாமரிண்ட்

பெருங்காயம் – Asafoetida – அசஃபோய்டைடா

மக்காச்சோளம் – Maize – மெய்ஸ்

மஞ்சள் – Turmeric – டர்மரிக்

மிளகாய் – Chillies – சில்லிஸ்

மிளகு – Pepper – பெப்பர்

மோர் – Butter Milk – பட்டர் மில்க்

லவங்கம் – Cloves – க்லெளவ்ஸ்

வெங்காயம் – Onion – ஆனியன்

வெண்ணெய் – Butter – பட்டர்

வெல்லம் – Jaggery – ஜாக்கரீ

ஜாதிக்காய் – Nutmeg – நட்மெக்

ஜாதிபத்திரி – Mace – மெக்

வாற்கோதுமை – Barley – பார்லி

சர்க்கரை – Sugar – ஸுகர்

முந்திரிப் பருப்பு தொக்கு

இது மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும். நீங்களும் செய்து பாருங்கள். இதனுடன் அனைத்து சாத வகைகளையும் சேர்த்து சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள்:

கடுகு – 1ஸ்பூன்

கறிவேப்பிலை – 1கொத்து

சின்ன வெங்காயம் – 1கப் பொடியாக நறுக்கியது

தக்காளி – 1கப் பொடியாக நறுக்கியது

முந்திரி – 2கப்

தேங்காய் பால் – 1கப்

கொத்தமல்லி தழை – 1/4கப்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு:-

கசகசா – 2ஸ்பூன்

தனியா – 4ஸ்பூன்

பட்டை,கிராம்பு – 5நம்பர்

காய்ந்த மிளகாய் – 5நம்பர்

இஞ்சி – 1ஸ்பூன்

பூண்டு – 2ஸ்பூன்

வெங்காயம் – 1ஸ்பூன்

முந்திரி – 4ஸ்பூன்

தேங்காய் – 1கப் துருவியது

மஞ்சள் தூள் – 1/2ஸ்பூன்

செய்முறை:-

அரைக்க வேண்டிய பொருள்களில் முதலில் கசகசா, தனியா எண்ணெய்யில்லாம் வறுக்கவும். அதனுடன் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, காய்ந்த மிளகாய், முந்திரி, இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்பு மிக்ஸியில் இக்கலவையுடன் தேங்காய் துருவல், மஞ்சள் தூள் சேர்த்து மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 5ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகை சேர்த்து வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கியதும் தக்காளி, முந்திரி சேர்த்து வதக்கவும்.

பின்பு அதனுடன் தேங்காய் பாலையும் அரைத்த கலவையும் தேவையான உப்பையும் சேர்த்து 5நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.

நன்கு கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு மேலாக கொத்தமல்லி தழைகளை தூவவும்.

சுவையான முந்திரிப் பருப்பு தொக்கு தயார்.

பூரி

இந்த பூரி ருசியாகவும் முறுமுறுப்பாகவும் இருக்கும். எளிதிலும் செய்து விடலாம். ஆறினாலும் நன்றாக இருக்கும். இதற்கு பூரி மசாலா சேர்த்து சாப்பிடலாம். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:-

மைதாமாவு அல்லது கோதுமை மாவு – 3 கப்

சோளமாவு – 1/4கப்

காய வைத்த பால் – தேவையான அளவு

ரவை – 5ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

  • முதலில் வாய் அகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, சோளமாவு, ரவை, உப்பு, எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • தண்ணீருக்கு பதிலாக காய வைத்த பாலை அதில் தேவையான அளவு ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • பிசைந்த மாவை 1மணிநேரம் ஊற விடவும்.
  • பின்பு ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்திகல்லில் சிறிது மைதா மாவை தூவி மாவையை வைத்து மிகவும் லேசாகவும் கனமாகவும் இல்லாமல் நடுத்தரமாக தேய்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதே போல் அனைத்து உருண்டைகளையும் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்த சப்பாத்தியை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனை குறைந்த தணலில் செய்தால் மிகவும் அருமையாக இருக்கும். தேவையான போது எடுத்து பரிமாறவும்.
  • சுவையான பூரி தயார்.

பருப்பு உருண்டை குழம்பு

இது மிகவும் சுவையாக இருக்கும். எளிதிலும் செய்து விடலாம். இதனை சாம்பார் சாதம், தயிர் சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:-

துவரம் பருப்பு – 1/4 கப்

கடலைப்பருப்பு – 1/4 கப்

பாசிப்பருப்பு – 1/4 கப்

தேங்காய் துருவல் – 1/2கப்

சோம்பு – 2ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 1கப் பொடியாக நறுக்கியது

தக்காளி – 1கப் பொடியாக நறுக்கியது

பச்சைமிளகாய் – 3நம்பர் பொடியாக நறுக்கியது

இஞ்சி, பூண்டு விழுது – 2ஸ்பூன்

கொத்தமல்லி தழை – 1/2கப்

கருவேப்பிலை – 1கொத்து

சாம்பார் தூள் – 2ஸ்பூன்

புளித்தண்ணீர் – 1/2 கப்

பெருங்காய்த் தூள் – 1/4ஸ்பூன்

கசகசா – 1ஸ்பூன்

வெந்தயம் – 1ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

தண்னீர் – தேவையான அளவு

செய்முறை:-

  • பருப்பு வகைகளை 1மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சோம்பை சேர்த்து ஒன்னும் பாதியுமாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்பு அதனை பாத்திரத்தில் எடுத்து அதனுடன் சிறிது வெங்காயம், சிறிது பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சிறிது கொத்தமல்லிதழை , உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வடை பதத்தற்கு கலந்து கொள்ளவும்.
  • பின்பு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடாக்கி இட்லி தட்டில் கலந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து தனியே எடுத்துக் கொள்ளவும். ( உருட்டிய உருண்டைகளை எண்ணெய்யிலும் பொரித்துக் கொள்ளலாம்.)
  • தேங்காய், வெங்காயம், கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் மைபோல் அரைத்துவைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெந்தயம்,பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து சிவக்க வறுக்கவும். நன்கு வறுத்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பொன்நிறம் மாறும் வரை வதக்கவும்.
  • நன்கு வதக்கியவுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில் புளித்தண்ணீர், சாம்பார் தூள், அரைத்த மசாலா, சிறிது தண்ணீர் உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்த வுடன் வெந்த உருண்டைகளை அதில் சேர்த்து 1கொதி வந்தவுடன் கீழே இறக்கி மேலாக கொத்தமல்லி தழையை தூவவும். தேவைப்படும் போது எடுத்து பரிமாறவும்.
  • சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார்.

இந்த குழம்பில் உருண்டைகளாக போடாமல் உதிர்த்து விட்டு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கினால் சுவையான வடைக்கறி ரெடி.

மீன் குழம்பு

இது மிகவும் சுவையாக இருக்கும். மீன் குழம்பு எல்லோருக்கும் செய்ய தெரியும். ஆனால் நான் இந்த விதத்தில் செய்வேன். இதையும் என் அன்பு அம்மாதான் கற்றுக்கொடுத்தார்கள். இதை அனைத்துவகை சாதத்துடனும், காலை வேலை உணவுகளுடனும் சேர்த்து உண்ணலாம். நீங்களும் செய்துபாருங்கள்.

தேவையான பொருள்கள்:-

ஏதாவது மீன் வகை (சிறிய மீன்) – 1/4கிலோ [ நகரை மீன், காரா மீன், வஞ்சர மீன், பாம்லெட் மீன், கிழங்கை மீன்]

தேங்காய் துருவல் – 1/4கப்

சின்ன வெங்காயம் – 1/2 கப் பொடியாக நறுக்கியது

தக்காளி – 1/4கப்

பச்சைமிளகாய் – 2நம்பர் 2ஆக கீறியது

வெந்தயம் – 1/4ஸ்பூன்

மஞ்சரங்காத்தூள் (மஞ்சள், சோம்பு, சீரகம் ஆகியவற்றை அரைத்த பொடி) – 2ஸ்பூன்

மிளகாய் தூள் – 1ஸ்பூன்

தனியாத்தூள் – 3ஸ்பூன்

புளித்தண்ணீர் – 1/2கப்

கறிவேப்பிலை – 1கொத்து

சோம்பு – 1ஸ்பூன்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :-

  • முதலில் மீனை நன்கு மண்சட்டியில் சிறிது கல் உப்பு சேர்த்து நன்கு உரசி 4 அல்லது 5 தடவை நன்கு அலசி தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • மிக்ஸி ஜாரில் தேங்காய், சிறிது வெங்காயம் சேர்த்து நன்கு மைபோல் அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் மஞ்சரங்காத்தூள், மிளகாய் தூள், தனியாத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்து கொள்ளவும்.
  • வாணலியில் தாளிக்காமல் மீன், அரைத்த மசாலா, புளித்தண்ணீர், உப்பு , பச்சைமிளகாய், தக்காளி, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து 1/4மணி நேரம் கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் அடுப்பை அனைத்து விடவும்.
  • தனியே வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து பொன்நிறம் வரும் வரை வதக்கி கொதித்து இறக்கிய குழம்புடன் சேர்த்து கலக்கி மூடி வைக்கவும்.
  • தேவையான போது எடுத்து பரிமாறவும்.
  • சுவையான மீன் குழம்பு தயார்.

பஜ்ஜி வகைகள்

சாயங்கால நேரங்களில் விதவிதமாய் பஜ்ஜி செய்து வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்து அவரின் பாராட்டைப் பெறுங்கள் ஓ.கே வா! wink_smile.gif

பஜ்ஜி மாவு:-

கடலை மாவு – 1கப்

அரிசி மாவு – 1/2 கப்

பெருங்காயத்தூள் – 1ஸ்பூன்

சோளமாவு – 1/4கப்

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் – 2ஸ்பூன்

பஜ்ஜி கலர் – 1/4 ஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

மேலே உள்ள எல்லாவற்றையும் தண்ணீர் ஊற்றி பஜ்ஜிமாவு பதத்தற்கு கரைத்துக் கொள்ளவும்.

பஜ்ஜி வகைகள்:-

  • வாழைக்காய் – முதலில் வாழைக்காயை தோல் சீவி மிகவும் லேசாக நறுக்கி பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
  • உருளைக்கிழங்கு – தோலை சீவி மிகவும் லேசாக நறுக்கி பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
  • மில் மேக்கர் – மில் மேக்கரை 1மணி நேரம் ஊற வைத்த பிறகு பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
  • ஆப்பிள் – மிகவும் லேசாக நறுக்கி பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
  • காலிஃபிளவர் – காலிஃபிளவரை சூடு நீரிலில் சிறிது நேரம் வேகவைத்து தனியே எடுத்து பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
  • பிஞ்சு சோளம் – பிஞ்சு சோளத்தை இரண்டு பாகமாக வெட்டி பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
  • காளான் – காளானை மிகவும் லேசாக நறுக்கி பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
  • முட்டை – முட்டையை வேகவைத்து மிகவும் லேசாக நறுக்கி பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
  • பிரெட் – பிரெட்டை பஜ்ஜி மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடவும்.
இதனுடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிடலாம். என்ன வீட்டில் தினமும் ஒன்று செய்து கலக்குவீங்களா சகோதரிகளே!

கத்திரிக்காய் தொக்கு

இந்த தொக்கு மிகவும் சுவையாக இருக்கும். இதனை அனைத்து வகை உணவுடனும் சேர்த்து சாப்பிடலாம். இதை நானே நேற்று செய்து பார்த்தேன். நல்லாயிருந்தால் உங்களுக்கும் சொல்லுகிறேன். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:-

கத்திரிக்காய் – 1/4கிலோ பொடியாக நறுக்கியது

சின்ன வெங்காயம் – 1கப் பொடியாக நறுக்கியது

தக்காளி – 1கப் பொடியாக நறுக்கியது

இஞ்சி பூண்டு விழுது – 2ஸ்பூன் பொடியாக நறுக்கியது

கொத்தமல்லி தழை – 1/4கப் பொடியாக நறுக்கியது

கறிவேப்பிலை – 1கொத்து

சாம்பார் பொடி – 2ஸ்பூன்

சோம்பு – 1ஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/4ஸ்பூன்

புளித்தண்ணீர் – 1/4கப்

தண்ணீர் – 1கப்

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
  • பின்னர் வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு கத்திரிக்காயையும் சேர்த்து வதக்கவும்.
  • அதனுடன் புளித்தண்ணீர், தண்ணீர் , சாம்பார் பொடி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு சுண்ட வரும் வரை கொதிக்க விடவும்.
  • நன்கு சுண்டி வந்தவுடன் கீழே இறக்கி மேலாக கொத்தமல்லி தழையை தூவவும்.
  • தேவைப்படும் போது எடுத்து பரிமாறவும்.
  • சுவையான கத்திரிக்காய் தொக்கு தயார்.

இட்லி மற்றும் தோசை – 2 in 1

இட்லி எல்லோருக்கும் செய்ய தெரியும். ஆனால் இந்த முறையில் எளிதாக செய்வேன். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள் :-

இட்லி அரிசி – கால்படி உலக்கு (2) அறைக்கா படி உலக்கு (2)

உளுந்து – வீசம்படி உலக்கு (2)

துவரம் பருப்பு – சிறிதளவு

வெந்தயம் – சிறிதளவு

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

  • முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்கு கழுவி ஊறவிடவும். வேற பாத்திரத்தில் உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை கழுவி ஊற விடவும். குறைந்தது 1 மணி நேரமாவது ஊறினால் எளிதில் அரைக்கும்.
  • க்ரைண்டரில் உளுந்து போட்டு தேவையான தண்ணீர் விட்டு 1/2மணி நேரம் அரைக்கவும். பின்பு அதனுடன் அரிசியையும் சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
  • நன்கு அரைத்ததும் க்ரைண்டர் ஓடும் போதே உப்பையும் சேர்த்து 5 நிமிடம் ஒட விடவும். (கையை பிசைவதற்கு பதிலாக)
  • பின்பு க்ரைண்டரை அமத்தி அரைத்த மாவை பாத்திரத்தில் கொட்டி வைத்து மூடி வைக்கவும். குறைந்தது 7மணி நேரம் இருந்தால் தான் இட்லி நன்றாக இருக்கும்.
  • அப்புறம் என்ன காலையில் இட்லி குக்கரில் மாவை ஊற்றி வேகவைத்து எடுத்து தேவையான சட்னியை செய்து சாப்பிடுங்கள்.
  • தோசை வேண்டுமா இட்லி மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி தோசைக்கல்லில் தோசை ஊற்றுங்கள். அவ்வளவு மிருதுவாகவும் மொறுமொறுப்பாகவும் வரும்.

சாம்பார் சாதம்

தேவையான பொருள்கள்:-

பொன்னி அரிசி – 1 கப்

காய்கறி – 1/4 கப் (முருங்கைக் காய், கத்திரிக்காய், பூசணிக்காய், காரட், முள்ளங்கி) இவற்றில் ஏதாவது 2 எடுத்துக் கொள்ளவும்

துவரம் பருப்பு – 1/2கப்

சின்ன வெங்காயம் – 1/4 கப்

நாட்டு தக்காளி – 1/4 கப்

பச்சைமிளகாய் – 2 நம்பர்

கொத்தமல்லி இழை – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

புளி தண்ணீர் – 1/4கப்

சாம்பார் பொடி – 1 ஸ்பூன்

சோம்பு, சீரகம், கடுகு, உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்

பெருங்காயத் தூள் – சிறிதளவு

நெய் – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

  • முதலில் குக்கரில் அரிசி, துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கொத்தமல்லி இழை, காய்கறி மற்றும் சிறிது நெய் விட்டு 3 விசில் வரும் வரை வேக விடவும்.
  • பின்பு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் சோம்பு, சீரகம், பெருங்காயத் தூள், உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  • நன்கு வதக்கியவுடன் புளித்தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து 1கொதி வந்தவுடன் குக்கரில் வேகவைத்த சாத கலவையை இதனுடன் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
  • பின்பு மேலாக கொத்தமல்லி இழை, நெய் விட்டு கிளறி சுடாக பரிமாறவும்.
  • சுவையான சாம்பார் சாதம் தயார்.

30 வகை முறுக்கு!

30 வகை முறுக்கு!

அவல் முறுக்கு

தேவையானவை: அவல் – 2 கப், கோதுமை மாவு (அ) மைதா மாவு – கால் கப், கெட்டியான மோர் – 2 கப்,

உப்பு, எள், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அவலை நன்றாகக் கழுவி மோருடன் கலந்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் எடுத்து

உப்பு சேர்த்து முறுக்கு பிழியும் அளவுக்கு கெட்டியாக அரைத்து, கோதுமை மாவு, எள்ளை சேர்க்கவும். அதை

முறுக்கு அச்சில் போட்டு, ஒரு துணியில் பிழியவும். இரண்டு அல்லது மூன்று முறை திருப்பிப் போடவும். ஈரம்

சிறிது காய்ந்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

————————————————————————–

——

வெண்ணெய் முறுக்கு

தேவையானவை: கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு – தலா ஒன்றேகால் கப், சோடா உப்பு – 2 சிட்டிகை,

வெண்ணெய் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு மூன் றையும் சுத்தம் செய்து உப்பு, வெண்ணெய், சோடா

உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும்.

பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, வெந்ததும் எடுக்கவும்.

————————————————————————–

——

கோயில் முறுக்கு

தேவையானவை: இடித்த பச்சரிசி மாவு – 4 கப், வெண்ணெய் – கால் கப், பொட்டுக்கடலை மாவு – 4 டீஸ்பூன்,

சீரகம் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் –

தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி மாவு, வெண்ணெய், பொட்டுக்கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, சீரகம், மிளகாய்த்தூள்

எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு முறுக்கு மாவு பதத்துக்கு தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.

அந்த மாவில் சிறிது எடுத்து, 3 அங்குல நீளத்துக்கு உருட்டி, இரண்டு முனைகளையும் இணைக்கவும். இதே

போல் எல்லா மாவையும் உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

மாவை உருட்டி வெகு நேரம் வைத்திருந்தால் காய்ந்து உடைந்து விடும். அதனால், சிறிது ஈரப்பசை

இருக்கும்போதே பொரித்தெடுக்க- வேண்டும்.

————————————————————————–

——

மைதா முறுக்கு

தேவையானவை: மைதா மாவு – 2 கப், உளுந்து பொடி – 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவை வெள்ளைத் துணியில் சுற்றி, ஆவியில் வைத்து எடுத்து உளுந்து பொடி,

வெண்ணெய், உப்பு சேர்த்து பிசையவும். பிசைந்த மாவை பெரிய கண் உள்ள முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த

எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுக்கவும்.

————————————————————————–

——

கோதுமை மாவு முறுக்கு

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், அரிசி மாவு – அரை கப், சீரகம் – கால் டீஸ்பூன், வெண்ணெய் –

ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவையும் அரிசி மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, சீரகம், வெண்ணெய்,

பெருங்காயத்-தூள், தேவையான தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை, முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழியவும். பொன்னிறமாக வெந்தவுடன்

வடித்-தெடுக்கவும்.

————————————————————————–

——

மரவள்ளிங்கிழங்கு முறுக்கு

தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு மாவு – ஒரு கப், அரிசி மாவு, கடலை மாவு – தலா கால் கப்,

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எள் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் –

தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எல்லா மாவுகளையும் போட்டு எள், மிளகாய்த்தூளை சேர்க்கவும். உப்பு,

பெருங்காயத்தை சிறிது தண்ணீரில் கரைத்து மாவு கலவையில் ஊற்றி, முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து

கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவை முறுக்கு குழாயில் போட்டு பிழிந்து, பொன்னிறமாக

பொரித்து எடுக்கவும். எள்ளுக்குப் பதில் ஓமம் சேர்த்தும் செய்யலாம்.

மரவள்ளிக்கிழங்கு மாவு கிடைக்கவில்லை என்றால் மரவள்ளிக்-கிழங்கை வேக வைத்து தோலுரித்து, முறுக்கு

மாவு பதத்தில் கெட்டியாக அரைத்துக் கொள்ளலாம்.

————————————————————————–

——

இனிப்பு முறுக்கு

தேவையானவை: உளுந்து – ஒரு கப், மாவு அரிசி – அரை கப், எண்ணெய் – தேவையான அளவு, வெல்லம் –

ஒரு கப்.

செய்முறை: உளுந்து, அரிசி இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைத்து சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து

கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

அரைத்த மாவை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து ஆற

விடவும்.

வெல்லத்தைப் பொடித்து, சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அதை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி,

அடுப்பில் வைத்து பாகு உருட்டும் பதத்தில் காய்ச்சவும். அதை பொரித்து வைத்துள்ள முறுக்குகளின் மேல்

ஊற்றிக் கிளறவும்.

இது, ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

————————————————————————–

——

ரவா தேன் குழல்

தேவையானவை: ரவை – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன், மிளகு,

சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ரவை, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கிளறி

இறக்கவும். பிறகு கோதுமை மாவு, மிளகு, சீரகத்தை பொடி செய்து சேர்த்துப் பிசையவும். வாசனைக்காக சிறிது

தேங்காய் எண்ணெயைச் சேர்க்கவும்.

பிசைந்த மாவை தேன்குழல் அச்சில் போட்டு, எண்ணெய் காய்ந்ததும் பிழியவும். நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

————————————————————————–

——

முள் முறுக்கு

தேவையானவை: அரிசி – 3 கப், கடலைப்பருப்பு – ஒரு கப், பயத்தம்பருப்பு – கால் கப், எள் (தேய்த்து

காய்ந்தது), சீரகம், கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு, வெண்ணெய் – சிறிய எலுமிச்சம்பழம் அளவு, உப்பு,

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு மூன்றையும் மிஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு, வெண்ணெய், எள், சீரகம்

சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும்.

முறுக்கு அச்சில் முள் முறுக்கு அச்சை வைத்து, அதில் மாவைப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும்.

பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

————————————————————————–

——

பயத்தம்பருப்பு முறுக்கு

தேவையானவை: பச்சரிசி – 4 கப், பயத்தம்பருப்பு – ஒரு கப், வெண்ணெய் – சிறிய எலுமிச்சம்பழம் அளவு, எள்,

சீரகம், பெருங்காயம் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பயத்தம்பருப்பை மிஷினில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் எள், சீரகம், வெண்ணெய்,

பெருங்காயம், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில்

பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

————————————————————————–

——

மெட்டி முறுக்கு

தேவையானவை: அரிசி மாவு – 2 கப், மைதா மாவு – அரை கப், காய்ந்த மிளகாய், சீரகம், எண்ணெய் –

தேவையான அளவு, சன்ன ரவை – ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – பெரிய எலுமிச்சம்பழம் அளவு, தேங்காய்

துருவல் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவலுடன் 2 மிளகாயை வைத்து சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும். ஒரு

பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவு, சன்ன ரவை, சீரகம், வெண்ணெய், உப்பு போடவும். அதில் அரைத்த

விழுதை சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவில் சிறிது எடுத்து, நீளமாக உருட்டி, பின் மெட்டியைப் போல இரண்டு சுற்று சுற்றி காய்ந்த

எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

————————————————————————–

——

புரொட்டீன் முறுக்கு

தேவையானவை: பயத்தம் பருப்பு – ஒரு கப், பச்சை பட்டாணி – அரை கப், வறுத்து அரைத்த உளுந்து மாவு –

கால் கப், பச்சரிசி மாவு – 4 கப், எள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பயத்தம்பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து ஆற விடவும். பச்சை

பட்டாணியை மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். வேக வைத்த பருப்பு, பட்டாணி விழுது, அரிசி மாவு, உளுந்து

மாவு, எள், உப்பு, மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் கெட்டியாகப் பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்கு அச்சில் மாவை நிரப்பி எண்ணெயில் பிழிந்து வேக விட்டு

எடுக்கவும். காய்ந்த பட்டாணியாக இருந்தால் முந்தைய நாள் இரவே ஊற வைத்து அரைக்க வேண்டும்.

————————————————————————–

——

புழுங்கலரிசி முறுக்கு

தேவையானவை: புழுங்கலரிசி – 4 கப், பொட்டுக்கடலை மாவு – ஒரு கப், சீரகம் – அரை டீஸ்பூன், எள் – 2

டீஸ்பூன், வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், ஊற வைத்த பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி, மிளகு – அரை டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். அதில்

பொட்டுக்கடலை மாவு, சீரகம், மிளகுத்தூள், எள், ஊற வைத்த பாசிப்பருப்பு, வெண்ணெய், உப்பு சேர்த்து

பிசையவும்.

வெள்ளை துணியின் மீது ஒரு டம்ளரை கவிழ்த்து, பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிது எடுத்து, டம்ளரை சுற்றி

கையினால் முறுக்கு சுற்ற வேண்டும். சுற்றிய முறுக்குகள் ஈரம் காய்ந்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சீரகம், மிளகுத்தூளுக்கு பதிலாக மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.

————————————————————————–

——

பச்சரிசி கார முறுக்கு

தேவையானவை: பச்சரிசி மாவு – 4 கப், பொட்டுக்கடலை மாவு – ஒரு கப், உப்பு, மிளகாய்த்தூள், தண்ணீர்,

எண்ணெய் – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 4 கப் தண்ணீர் ஊற்றவும். அதில் உப்பு போட்டு, மெதுவாக

கொதிக்க ஆரம்பிக்கும்போது அரிசி மாவை கொட்டி, அடுப்பிலேயே வைத்துக் கிளறி, பின்னர் அடுப்பை

அணைத்து விடவும்.

இந்த மாவை தட்டில் போட்டு பிசைந்து, சூடு ஆறியதும் பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள் சேர்த்துப்

பிசையவும்.இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து சுட்டெடுக்கவும்.

————————————————————————–

——

ஸ்பெஷல் தூள் முறுக்கு

தேவையானவை: அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா ஒரு கப், சீரகம் – சிறிதளவு,

காய்ச்சிய எண்ணெய் – அரை கரண்டி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, சீரகம் போட்டு

காய்ச்சிய எண்ணெயை ஊற்றி கலக்கவும்.

கலவையை உதிரியாக பிசைந்து, அடிக்கடி தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும். பிறகு அந்த மாவை முறுக்கு

அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, வெந்ததும் எடுக்கவும். இது தூள் முறுக்காக வரும்.

————————————————————————–

——

தயிர் முறுக்கு

தேவையானவை: அரிசி – 3 கப், உளுத்தம்பருப்பு – அரை கப், உப்பு போட்டு அரைத்த பச்சைமிளகாய் விழுது –

கால் கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், புளித்த தயிர் – அரை கப், எள் – சிறிதளவு, எண்ணெய் – தேவையான

அளவு.

செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் மிஷினில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவுடன்

பச்சைமிளகாய் விழுது, நெய், எள், புளித்த தயிரை சேர்த்துப் பிசையவும்.

தேவையானால் சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து, தேன்குழல் அச்சில் போட்டு, எண்ணெயில் பிழியவும்.

பொன்னிறமானதும் எடுக்கவும்.

பச்சைப்பயறு முறுக்கு

தேவையானவை: அரிசி மாவு – 2 கப், முளைவிட்ட பச்சைப் பயறு – அரை கப், மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான

அளவு, ஓமம் – சிறிதளவு.

செய்முறை: முளைவிட்ட பச்சைப்பயறை குக்கரில் வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக்

கொள்ளவும். இந்த விழுதுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெண்ணெய், உப்பு சேர்த்து

பிசையவும்.

முறுக்கு குழலில் நட்சத்திர அச்சைப் போட்டு, பிசைந்த மாவை அதில் போட்டு சின்ன முறுக்குகளாகப் பிழியவும்.

வெந்ததும் எடுக்கவும்.

————————————————————————–

——

சோயா தேன்குழல்

தேவையானவை: சோயா மாவு – 4 கப், அரிசி மாவு – ஒரு கப், வறுத்துப் பொடித்த உளுந்து மாவு – ஒரு

டேபிள்ஸ்பூன், நெய் – கால் கப், சீரகம் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: நெய்யை சூடாக்கிக் கொள்ளவும். சோயா மாவு, அரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு, சீரகம், நெய்

எல்லாவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். மாவில்

சிறிதளவு சூடான எண்ணெயை ஊற்றிப் பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழியவும். பொன்னிறமாக

வெந்ததும் எடுக்கவும்.

————————————————————————–

——

சோயா முள் முறுக்கு

தேவையானவை: பொட்டுக்கடலை மாவு, சோயா மாவு, அரிசி மாவு – தலா ஒரு கப், சீரகம் – 2 டீஸ்பூன், நெய்

- ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, சோயா மாவு, அரிசி மாவு, சீரகம், உப்பு போட்டு நன்றாக

கலந்து கொள்ளவும். அதில் நெய்யை போட்டுப் பிசறி, சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும்.

முறுக்குக் குழாயில் முள்ளு முறுக்கு அச்சைப் போட்டு, அதில் மாவை நிரப்பி எண்ணெயில் பிழிந்து பொரித்து

எடுக்கவும்.

————————————————————————–

——

சோயா ரிப்பன் முறுக்கு

தேவையானவை: சோயா மாவு – ஒரு கப், கடலை மாவு, அரிசி மாவு – தலா அரை கப், எள், நெய் – தலா ஒரு

டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: எல்லா மாவுகளையும் சலித்து ஒரு பாத்திரத்தில் போட்டு, நெய்யை சூடாக்கி ஊற்றவும். அதில் எள்,

உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.

முறுக்குக் குழாயில் ரிப்பன் அச்சைப் போட்டு அதில் மாவை நிரப்பி, காய்ந்த எண்ணெயில் பிழியவும். நன்றாக

வெந்ததும் எடுக்கவும்.

————————————————————————–

——

திடீர் முறுக்கு

தேவையானவை: உளுத்தம்பருப்பு – அரை கப், அரிசி மாவு – இரண்டரை கப் (அரிசி, உளுந்து 5:1 என்ற

விகிதத்தில் இருக்க வேண்டும்), சீரகம் – 2 டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், காய்ச்சிய எண்ணெய் – அரை

டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை கழுவி, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். மூன்று

முறை விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக வெண்ணெய்போல்

அரைக்கவும்.

அரிசி மாவில் வெண்ணெய், உப்பு, காய்ச்சிய எண்ணெய், சீரகம் சேர்த்து நன்றாக பிசறவும். பிறகு அதில்

அரைத்த உளுந்து மாவை சேர்க்கவும். தேவையானால் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு

பதத்துக்குப் பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் முறுக்கு அச்சில் மாவைப் போட்டு பிழியவும். இது, வெள்ளையாக

இருக்கும். சீரகத்துக்கு பதிலாக எள் சேர்த்தும் செய்யலாம்.

————————————————————————–

——

உருளைக்கிழங்கு தேன்குழல்

தேவையானவை: உருளைக்கிழங்கு – கால் கிலோ, வறுத்த உளுந்து மாவு – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 2

டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்துக் கொள்ளவும். அதை மிக்ஸியில் கெட்டியாக

அரைக்கவும். அதோடு உளுந்து மாவு, உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு எண்ணெயில் பிழியவும்.

சிவந்தவுடன் எடுக்கவும்.

————————————————————————–

——

வாழைக்காய் தேன்குழல்

தேவையானவை: வாழைக்காய் – 2, வறுத்த உளுந்து மாவு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு,

வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயை வேக வைத்து, தோல் உரித்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் உளுந்துமாவு, பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து முறுக்கு பதத்துக்கு பிசைந்து

கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தேன் குழல் அச்சில் மாவைப் போட்டு எண்ணெயில் பிழியவும்.

சிவந்ததும் எடுக்கவும்.

————————————————————————–

——

கருப்பட்டி முறுக்கு

தேவையானவை: பச்சரிசி மாவு – 5 கப், வறுத்த உளுந்து மாவு – ஒன்றரை கப், எள் – 2 டேபிள்ஸ்பூன், நெய் –

2 டேபிள்ஸ்பூன், கருப்பட்டி – 2 கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, வறுத்த உளுந்து மாவு, எள், உப்பு, நெய் ஆகியவற்றைப் போட்டு

கலந்து கொள்ளவும். கருப்பட்டியை தூள் செய்து தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

அதில் மாவு கலவையை கொட்டிக் கிளறவும். ஆறிய பிறகு நன்றாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி

காய்ந்ததும், மாவை முறுக்குக் குழலில் போட்டு எண்ணெயில் பிழியவும். வெந்தவுடன் எடுக்கவும்.

————————————————————————–

——

பச்சரிசி ஜீரா முறுக்கு

தேவையானவை: பச்சரிசி – இரண்டரை கப், சர்க்கரை – 5 கப், உளுத்தம்பருப்பு – ஒரு கப், வெண்ணெய் – 2

டேபிள்ஸ்பூன், எள்- ஒன்றரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியை தண்ணீரில் ஊற வைத்து கழுவி, நீரை வடித்து இடித்து சலித்துக் கொள்ளவும்.

உளுத்தம்பருப்பை வறுத்து ஆறிய பிறகு நைஸாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாகக்

கலந்து, உப்பு, எள், வெண்ணெய், தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்குக் குழாயில் மாவைப் போட்டு எண்ணெயில் பிழிந்து

வெந்தவுடன் எடுக்கவும்.

சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து, 2 கம்பி பாகு பதத்தில் முற்றிய பாகு காய்ச்சவும்.

முறுக்கை ஓடித்து ஜீராவில் கொட்டி நன்றாகக் கிளறி விடவும். இளஞ்சூடாக இருக்கும்போதே உருண்டையாகப்

பிடிக்கலாம். அல்லது உதிர்த்து விட்டு உதிராகவும் வைக்கலாம்.

————————————————————————–

——

வளைய முறுக்கு

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – 2 கப்,

மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். அரிசி மாவை கடாயில் போட்டு சிறிது சிவக்க

வறுக்கவும். அதில் உப்பு, மிளகாய்த்தூள், வெந்த பாசிப்பருப்பு சேர்த்து வேக விடவும். இந்தக் கலவை கெட்டியாக

வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.

அதில் மைதா மாவை சேர்த்துப் பிசைந்து சிறு வளையங்களாக செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி

காய்ந்ததும், வளையங்களை அதில் போட்டு சிவந்து வந்தவுடன் எடுக்கவும்.

————————————————————————–

——

தேங்காய்ப்பால் முறுக்கு

தேவையானவை: அரிசி மாவு – 2 கப், உளுத்தம்பருப்பு மாவு – 2 கப், வெண்ணெய் – 2 டீஸ்பூன்,

தேங்காய்ப்பால் – ஒரு கப், சீரகம், மிளகு – தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்து மாவாக பொடிக்கவும். இதனுடன் அரிசி மாவு,

தேங்காய்ப்பால், உப்பு, பொடித்த மிளகு, சீரகம், வெண்ணெய் சேர்த்துப் பிசையவும்.

முறுக்கு அச்சில் மாவைப் போட்டு ஈரத்துணி மீது அல்லது பாலித்தீன் ஷீட்டில் சிறு சிறு முறுக்குகளாகப்

பிழியவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்குகளை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தேங்காய் எண்ணெயில் பொரித்தால் சுவையும் மணமும் அமோகமாக இருக்கும்.

————————————————————————–

——

மனோகரம்

தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், பச்சரிசி – 2 கப், உப்பு – அரை டீஸ்பூன், பல்லு பல்லாக நறுக்கிய

தேங்காய் – அரை கப், பொடித்த வெல்லம் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன்,

எண்ணெய் – தேவையான அளவு,

செய்முறை: அரிசி, பருப்பை நைஸாக அரைத்து, உப்பு, தண்ணீர், நெய் சேர்த்து நன்றாகப் பிசையவும். கடாயில்

எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

வெல்லத்தை உருட்டும் பதத்தில் காய்ச்சவும். நொறுக்கி வைத்துள்ள தேன்குழலில் ஏலக்காய்த்தூள்,

தேங்காய்ப்பால் சேர்த்து, பாகை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். பாகு நன்றாக கலந்தவுடன்

உருண்டையாகப் பிடிக்கலாம். இளம் சூடாக இருக்கும் போது தனித்தனியாக உதிர்த்தும் வைத்துக் கொள்ளலாம்.

————————————————————————–

——

நெய் முறுக்கு

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், கடலை மாவு – கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,

வெண்ணெய் – நெல்லிக்காய் அளவு, நெய் – 4 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியை ஊற வைத்து இடித்து, சலித்து, காய வைத்துக் கொள்ளவும். இந்த மாவுடன் கடலை

மாவு, உப்பு வெண்ணெய், நெய், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அதில் தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு

பதத்துக்குப் பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, அதனுடன் வாசனைக்கு சிறிது நெய்யும் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், முள்

முறுக்கு அச்சில் மாவைப் போட்டுப் பிழியவும். வெந்தவுடன் எடுக்கவும்.

————————————————————————–

——

கை முறுக்கு

தேவையானவை: பிசுக்குள்ள பச்சரிசி – 2 கப், உளுத்தம்பருப்பு – கால் கப், வெண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன், எள்

- ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கை முறுக்கு சுற்ற பிசுக்குள்ள அரிசியாக இருந்-தால் நல்லது. அரிசியை தண்ணீ-ரில் அரை மணி

நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு வெள்ளைத் துணியில் முடிந்து வைத்தால் தண்ணீர் வடிந்து விடும். பிறகு

அதை மிக்ஸியில் போட்டு மாவாக்கி நைஸாக சலிக்கவும். உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து, அரைத்து

சலித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து பிசையவும்.

மாவு பதம் நன்றாக இருந்தால்தான் நன்றாக முறுக்கு சுற்ற முடியும். வெள்ளைத் துணி மேல் ஒரு பாட்டில்

மூடியை வைத்து, அதைச் சுற்றி முறுக்கு சுற்றவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும், அதில் ஒவ்வொரு முறுக்காக மெதுவாக எடுத்து நிதானமாக போடவும்.

முதலில் சடசடவென சத்தம் வரும். ஒரு பக்கம் வெந்ததும், முறுக்குகளைத் திருப்பிப் போட வேண்டும். வெந்த

முறுக்கு எண்ணெயில் மிதக்கும். சடசட சத்தம் அடங்கியதும், எண்ணெயை வடிய விட்டு முறுக்கை எடுக்கவும்.

தேங்காய் எண்ணெயில் செய்தால் மொறு மொறுப்பாகவும், மணமாகவும் இருக்கும்.

************************************************************************************************

30 வகை கொழுக்கட்டை

30 வகை கொழுக்கட்டை

பனை ஓலை கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – முக்கால் கிலோ, கருப்பட்டி – அரை கிலோ, ஏலக்காய் – 10, தேங்காய் – ஒரு

மூடி, பனை (அ) தென்னை ஓலை – 1.

செய்முறை: பச்சரிசியை ஊற வைத்து, களைந்து நிழலில் உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். கடாயை காய வைத்து, துருவிய தேங்காயை ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவலைப் போடவும். கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து இளம்பாகு பதத்தில் காய்ச்சவும். இறக்கி வடிகட்டி, மாவுடன் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

ஓலையை அரை அடி நீளத்துக்கு நறுக்கி, பிசைந்த மாவை அதன் நடுவில் வைத்து, இட்லி தட்டில் வேக விட்டு எடுக்கவும்.

————————————————————————–

——

பால் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, பால் – அரை லிட்டர், சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் – 6,

முந்திரி பருப்பு – 10, நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி நிழலில் உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவைக் கொட்டி தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்தில் பிசைந்து, அதை சீடை அளவில் சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் உருட்டிய கொழுக்கட்டைகளைப் போடவும். வெந்ததும் வடித்துக் கொள்ளவும். வடித்த தண்ணீரில் பாலை சேர்த்துக் காய்ச்சி, சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்தவுடன் வேக வைத்த கொழுக்கட்டை, பொடித்த ஏலக்காயை சேர்க்கவும்.

முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

————————————————————————–

——

பச்சரிசி சர்க்கரை கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் – 3,

பச்சை கற்பூரம் – சிறிதளவு.

செய்முறை: பச்சரிசியை ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டி நிழலில் உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி லேசாக வறுத்துக் கொள்ளவும். ஏலக்காய், பச்சை கற்பூரத்தைப் பொடித்துக் கொள்ளவும்.

பச்சரிசி மாவில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலம், பச்சை கற்பூரத்தை சேர்த்து, தண்ணீர் தெளித்து பதமாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டுகளில் பரப்பி வேக வைக்கவும்.

வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

————————————————————————–

——

பச்சரிசி கருப்பட்டி கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, கருப்பட்டி – ஒன்றரை கப், ஏலக்காய் – 6,

எள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை நன்றாக ஊறவைத்து களைந்து, நிழலில் உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். கருப்பட்டியை இளம்பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி லேசாக

வறுத்துக் கொள்ளவும். மாவுடன் பொடித்த ஏலக்காய், எள், கருப்பட்டிப் பாகு, தேங்காய் துருவலை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் பரப்பி வேக வைக்கவும்.

வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

————————————————————————–

——

புழுங்கலரிசி தேங்காய் கொழுக்கட்டை

தேவையானவை: புழுங்கலரிசி – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் – 6.

செய்முறை: புழுங்கலரிசியை கல், தூசு நீக்கி மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன், ஏலக்காய், தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டு பிசையவும். கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வேக
வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

கோதுமை சர்க்கரை கொழுக்கட்டை

தேவையானவை: கோதுமை – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் – 6.

செய்முறை: கோதுமையை லேசாக வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி, வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் வறுத்த தேங்காய், சர்க்கரை, பொடித்த ஏலக்காய், தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் அடுக்கி வேக வைக்கவும். வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

————————————————————————–

——

தேங்காய் ரவை கொழுக்கட்டை

தேவையானவை: ரவை, சர்க்கரை – தலா ஒன்றரை கப், அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் – ஒரு மூடி, ஏலக்காய் – 6, வெனிலா எசன்ஸ் – 2 துளி.

செய்முறை: தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். ரவையுடன் அரிசி மாவு, சர்க்கரை, பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல், வெனிலா எசன்ஸ் சேர்த்து வெந்நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

தேங்காய் பூந்தி கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, இனிப்பு பூந்தி – ஒரு கப், சர்க்கரை – அரை கப், தேங்காய் – ஒரு மூடி, ஏலக்காய் – 6.

செய்முறை: பச்சரிசியை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுக்கவும்.

ஏலக்காயைப் பொடிக்கவும். இவற்றை பூந்தி, சர்க்கரையுடன் சேர்த்து, லேசாக மசித்துக் கொள்ளவும்.

அரைத்த மாவில் தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு பக்குவத்தில் பிசைந்து மெல்லிய கிண்ணம்போல் செய்து கொள்ளவும். அதில் மசித்து வைத்துள்ள பூந்திக் கலவையில் சிறிது போட்டு மூடவும். பிறகு இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்

————————————————————————–

——

வெல்ல மோதக கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, வெல்லம் – ஒன்றரை கப், ஏலக்காய் – 6, தேங்காய் – 1.

செய்முறை: பச்சரியை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும்.

ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தை இளம் பாகாய்க் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன், ஏலக்காய் பொடி, வெல்லப்பாகு சேர்த்து உருண்டை உருட்டும் பதத்தில் கலந்து கொள்ளவும்.

மாவுடன் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, மெல்லியதாக தட்டிக் கொள்ளவும். செய்து வைத்துள்ள தேங்காய் பூரணத்தில் சிறிது எடுத்து மாவினுள் வைத்து ஓரங்களை மூடி இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

பழ கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒன்றரை கப், உப்பு – ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் – அரை கப், துருவிய தேங்காய் – அரை மூடி, பலாச்சுளை – 15, ஆப்பிள், மாம்பழம், பச்சை
வாழைப்பழம் – தலா 1, டால்டா – 2 டீஸ்பூன்.

செய்முறை: பலாச்சுளையின் கொட்டையை நீக்கி பொடியாக நறுக்கவும். வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழத்தின் தோலை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பழங்களை வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். ஒரு கொதி வந்ததும், துருவிய தேங்காயையும், பொடி செய்த வெல்லத்தையும் போட்டு தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் கிளறிக் கொண்டேயிருக்கவும். பிறகு டால்டாவை விட்டு சுருளக் கிளறி, இறக்கி ஆற விடவும். இதை சிறிய கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஒரு
தட்டில் வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீரை அளவாக வைத்து கொதிக்க விட்டு அதில் எண்ணெய், உப்பு, சேர்க்கவும். பிறகு அரிசி மாவை இதில் கொட்டி கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். சற்று ஆறியதும் கிண்ணம் போல் செய்து, அதன் நடுவில் பழக்கலவையை வைத்து மூடவும். இப்படி எல்லாவற்றையும் செய்த பிறகு இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

பேரீச்சம்பழ கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – அரை கிலோ, கொட்டை நீக்கி பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழ துண்டுகள் – ஒரு கப், முந்திரி துண்டுகள் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு கப், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு, சூடானதும் முந்திரி, பேரீச்சம்பழத்தைப் போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் கழித்து வெல்லத்தூள் சேர்த்து கிளறி, பூரணம் பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி வைக்கவும்.

கொதிக்கும் தண்ணீரில் அரிசிமாவு, உப்பு சேர்த்துக் கிளறி வேகவிட்டு இறக்கவும். வெந்த மாவில் சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து பேரீச்சம் பழ பூரணத்தை வைத்து மூடி, இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

இரும்பு சத்து நிறைந்த சத்தான கொழுக்கட்டை இது.

————————————————————————–

——

கம்பரிசி இனிப்பு கொழுக்கட்டை

தேவையானவை: கம்பரிசி – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, கருப்பட்டி – அரை கிலோ, ஏலக்காய் – 6.

செய்முறை: கம்பரிசியை லேசாக வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும். கருப்பட்டியை இளம்பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டவும். பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல், கருப்பட்டி பாகை மாவுடன் சேர்த்து (வறுத்த மாவு

என்பதால், தண்ணீர் அதிகம் தேவைப்படும். பாகுடன் சிறிது வெந்நீர் சேர்த்துக் கொள்ளலாம்) கொழுக்கட்டை பதத்தில் பிசையவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

————————————————————————–

——

ரவை கொழுக்கட்டை

தேவையானவை: ரவை – ஒன்றரை கப், அரிசி மாவு – ஒரு கப், கடலைப் பருப்பு – கால் கப், கேரட் – 2 (துருவிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் – 4 (மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்), உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலைப் பருப்பை முக்கால் பதத்தில் வேக வைத்துக் கொள்ளவும். ரவையுடன் அரிசிமாவு, வேக வைத்த கடலைப் பருப்பு, துருவிய கேரட், அரைத்த மிளகாய், உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு நன்றாகப் பிசையவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

உப்பில்லா கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – அரை கிலோ, நெய் – 25 கிராம், தேங்காய் – அரை மூடி.

செய்முறை: பச்சரிசி மாவில் தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். ஈரத் துணியில் வைத்து சிறு தட்டைகளாக தட்டிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். தட்டி
வைத்துள்ள கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக கொதி நீரில் போடவும். வெந்ததும் தண்ணீரை வடிகட்டி கொழுக்கட்டைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு நெய், தேங்காய் துருவல் கலந்துபிசறி சாப்பிடவும்.

————————————————————————–

——

பருப்பு கொழுக்கட்டை கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, கடலைப் பருப்பு – 100 கிராம், வெல்லம் – 300 கிராம், தேங்காய் – ஒரு மூடி, ஏலக்காய் – 6.

செய்முறை: பச்சரிசியை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி வறுத்துக் கொள்ளவும், ஏலக்காயை மிக்ஸியில் ஓன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தை இளம்பாகாகக்
காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பிறகு இதில் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி, கடலைப் பருப்பு சேர்த்து உருட்டும் பதத்தில் செய்து கொள்ளவும்.

பச்சரிசி மாவைப் பிசைந்து மெல்லியதாக கிண்ணம் போல் செய்து, அதில் பூரணத்தை வைத்து ஓரங்களை மூடி, இட்லித் தட்டில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

————————————————————————–

——

அவல் கார கொழுக்கட்டை

தேவையானவை: அவல் – கால் கிலோ, பச்சரிசி மாவு – அரை கிலோ, உப்பு – தேவையான அளவு, பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – 3, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி (பொடியாக

நறுக்கிக் கொள்ளவும்) – சிறிதளவு, துருவிய கேரட் – ஒரு கப், கடுகு, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அவலை தண்ணீரில் நன்றாகக் களைந்து பிழிந்து வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அவல், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட், உப்பு சேர்த்து வதக்கவும். கார பூரணம் ரெடி!

கொதிக்கும் தண்ணீரில் பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் மரக் கரண்டியால் கிளறவும். வெந்ததும் இறக்கி, மாவை கிண்ணம் போல் செய்து, அதில் அவல் பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வேக வைத்து இறக்கிப் பரிமாறவும்.

நீர் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், கெட்டியான தேங்காய்ப் பால் – அரை கப், இரண்டாவது தேங்காய்ப் பால் – 2 கப், உப்பு – தேவையான அளவு, சீரகம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: 2 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதித்த தண்ணீரை சிறிது சிறிதாக மாவில் விட்டு, சிறிது உப்பு சேர்த்து, கெட்டியாகக் கிளறவும்.

கிளறிய மாவை நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும். இரண்டாவது தேங்காய்ப் பாலை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கொதிக்கும் பாலில் சீரகம், உருண்டைகளைப் போட்டு மிதமான தீயில் 8 நிமிடம் வேகவிடவும். நன்கு வெந்ததும் முதல் பாலை விட்டு கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

————————————————————————–

——

புதினா கொழுக்கட்டை

தேவையானவை: புதினா – ஒரு கட்டு, பச்சை மிளகாய், தக்காளி – தலா 1, பச்சரிசி மாவு – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 3, சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புதினாவை ஆய்ந்து, கழுவி சுத்தம் செய்து, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீரை நன்றாகக்

கொதிக்க வைத்து அதில் உப்பு, அரைத்த புதினா விழுது, வெங்காயம், சீரகம் சேர்த்து, மாவை சிறிது சிறிதாகப் போட்டுக் கட்டியில்லாமல் கிளறி, வெந்ததும் இறக்கவும்.

இந்த மாவை சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து 4 விரல்களும் பதியும் படி மூடி திறக்கவும். எல்லா மாவையும் இதுபோலவே பிடி கொழுக்கட்டைகளாக செய்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

கோவா கொழுக்கட்டை

தேவையானவை: மைதா மாவு – ஒரு கப், சர்க்கரை – அரை கப், பால்கோவா – கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, குங்குமப்பூ – சிறிது, பால் – அரை லிட்டர்.

செய்முறை: மைதாவை சலித்து உப்பு, தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பாலில் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சி, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பிசைந்த மாவில் சிறிது எடுத்து கிண்ணம்

போல் செய்து, அதில் சிறிது பால்கோவாவை வைத்து சமோசா வடிவில் மடித்து ஓரங்களை ஒட்டவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொழுக்கட்டைகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

இந்த கொழுக்கட்டைகளை காய்ச்சிய பாலில் போட்டுப் பரிமாறவும்.

————————————————————————–

——

இனிப்பு அவல் கொழுக்கட்டை

தேவையானவை: அவல் – கால் கிலோ, தேங்காய் துருவல் – ஒரு கப், அரிசி மாவு – அரை கிலோ, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை: அவலை சுத்தம் செய்து தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து வடித்து, தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் கலந்து வைத்துக் கொள்ளவும்.

தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, அரிசிமாவைப் போட்டு கட்டியில்லாமல் கிளறவும். இந்த மாவில் கிண்ணம் போல் செய்து, அதனுள் அவல் பூரணத்தை வைத்து மூடி,

இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

வெஜிடபிள் கொழுக்கட்டை

தேவையானவை: உருளைக்கிழங்கு – 4, கேரட், பீட்ரூட், நூல்கோல் – தலா 1, முட்டைகோஸ், பீன்ஸ் – தலா 50 கிராம், காலிஃபிளவர் – சில துண்டுகள், இஞ்சி – ஒரு துண்டு, பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் –

8, எலுமிச்சம்பழம் – 1, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை: எல்லா காய்களையும் நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி தண்ணீர் விடாமல் ஆவியில் வேக வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு

தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் காய்கறி கலவை, சிறிது உப்பு சேர்க்கவும். கடலை மாவை சிறிதளவு தண்ணீரில்

கரைத்து இதில் விடவும். கொதித்து கெட்டியாக உருட்டும் பதத்தில் வந்ததும் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து விடவும். காய்கறி பூரணம் ரெடி!

கொதிக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய், அரிசி மாவு, உப்பு சேர்த்து, கட்டியில்லாமல் நன்றாகக் கிளறவும். இந்த மாவில் சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து, இதில் பூரணத்தை வைத்து மூடி, இட்லித்

தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

மிளகு கொழுக்கட்டை

தேவையானவை: புழுங்கலரிசி – அரை கிலோ, சிறிய தேங்காய் – 1, உப்பு – தேவையான அளவு, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – கால் கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் களைந்து ஊறவிடவும். ஊறியதும், தேங்காயை கீறிப் போட்டு உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். வெறும் கடாயில் மிளகை வறுத்து நைசாகப்
பொடித்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த மாவைப் போட்டு சுருளக் கிளறி, கையில் ஒட்டாத பதத்தில் இறக்கி ஆற விடவும். இந்த மாவில் நெல்லிக்காய் அளவு எடுத்து உருட்டி, இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும். கொழுக்கட்டையில் மிளகுத்தூள், நெய் சேர்த்து நன்கு பிரட்டி எடுத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

பாசிப்பருப்பு மடக்கு கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – அரை கிலோ, பாசிப்பருப்பு – கால் கிலோ, ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 கப், நாட்டுச் சர்க்கரை, உப்பு – தேவையான அளவு, முந்திரி பருப்பு – 10 கிராம்.

செய்முறை: பாசிப்பருப்பை வறுத்து முக்கால் பதத்தில் வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை வடித்து விட்டு நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி துண்டுகளை சேர்த்து கிளறிக் கொள்ளவும்.

பூரணம் ரெடி!

அரிசி மாவில் வெந்நீர், உப்பு, ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துப் பிசையவும். மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும் கிண்ணம் போல் செய்து, அதில் பூரணத்தை வைத்து ஓரங்களை மடித்து விட்டு, இட்லித் தட்டில் வேக
வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

உருளைக்கிழங்கு கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒன்றரை கப், உருளைக்கிழங்கு – 200 கிராம், சீரகத்தூள் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 6 (மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்), உப்பு – தேவையான அளவு, பொடியாக

நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும். அரிசி மாவுடன் பச்சை மிளகாய், வெந்த உருளைக்கிழங்கு, சீரகத்தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசையவும். இதில் சிறிது எடுத்து
கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

சென்னா கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

பூரணத்துக்கு: ஊற வைத்து வேக வைத்த சென்னா – அரை கப், பொடியாக நறுக்கிய தேங்காய், பொடியாகநறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மாங்காய் – அரை டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, நிழலில் உலர்த்தி மிக்ஸியில் நைசாக அரைத்து சலித்துக் கொள்ளவும். ஒரு கப் (ஒரு கப் மாவுக்கு ஒரு கப் தண்ணீர் விகிதம்) தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கொதிக்கும்போது ஒரு சிட்டிகை உப்பு, எண்ணெய் சேர்த்து, கொதித்ததும் மாவைத் தூவி, கட்டியில்லாமல் கிளறவும். பிறகு ஆற வைத்துப் பிசைந்து, ஈரத் துணியால் மூடி வைக்கவும்.

சென்னாவை ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்து, அதனுடன் மற்ற பொருட்களையும் கலந்து, பூரணமாக செய்து கொள்ளவும்.

பிசைந்த மாவில் சிறிது எடுத்து சிறிய கிண்ணம் போல் செய்து சென்னா பூரணத்தை நிரப்பி மூடி, இட்லித் தட்டில் வேகவிட்டு எடுக்கவும்.

————————————————————————–

——

மக்காச்சோள கொழுக்கட்டை

தேவையானவை: மக்காச்சோளம் – அரை கிலோ, சர்க்கரை – ஒன்றரை கப், தேங்காய் – ஒரு மூடி, ஏலக்காய் – 6.

செய்முறை: மக்காச்சோளத்தை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயை காய வைத்து மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுத்துக்கொள்ளவும். தேங்காய், சர்க்கரை, பொடித்த ஏலக்காயை மாவுடன் சேர்த்துப் பிசையவும். இந்த மாவில் சிறிது எடுத்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

கலர்ஃபுல் கொழுக்கட்டை

தேவையானவை: ஊற வைத்து நிழலில் உலர்த்தி, அரைத்து வறுத்த பச்சரிசி மாவு – 2 கப், 5 முதல் 6 மணி நேரம் ஊறிய ஜவ்வரிசி – ஒன்றரை டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப், குழையாமல் வேகவைத்த பாசிப்பருப்பு, நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, சீரகம் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, விருப்பப்பட்ட ஃபுட் கலரிங் – 2 (அ) 3 துளிகள்.

செய்முறை: கலர் நீங்கலாக.. மாவுடன் மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து, வெந்நீரை ஊற்றி கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை வைத்துள்ள கலர்களுக்கேற்ப பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளவும். ஒவ்வொரு வண்ணத்தையும் ஒவ்வொரு பகுதியுடன் சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வேக வைத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

ராகி கொழுக்கட்டை

தேவையானவை: ராகி மாவு – ஒரு கப், பொடித்த வெல்லம் (அ) கருப்பட்டி – அரை கப், தேங்காய் துருவல் – கால் கப், மிகவும் பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்த முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: ராகி மாவை அரை டேபிள்ஸ்பூன் நெய்யில் வறுத்து ஆறவிட்டு, அதனுடன் வெல்லம் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும். வெல்லத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைய விடவும். கரைந்ததும் வடிகட்டி மாவில் விட்டு நன்கு பிசையவும். பாகு போதவில்லையெனில் சிறிது வெந்நீரை சேர்த்துக் கொள்ளலாம். இந்த மாவில் சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து மடித்து, இட்லித் தட்டில் வேக விட்டு எடுக்கவும்.

————————————————————————–

——

டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய காய்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம், பாதாம், முந்திரி, வெள்ளரி விதை, துருவிய கொப்பரை எல்லாம் சேர்ந்தது -
அரை கப், தேன் – 2 டேபிள்ஸ்பூன், சுக்குப்பொடி – ஒரு சிட்டிகை.

செய்முறை: அத்திப்பழம், பேரீச்சம்பழம், முந்திரி, பாதாம், வெள்ளரி விதை, கொப்பரை எல்லாவற்றையும் தேனுடன் சேர்த்துப் பிசைந்து, பூரணமாகக் கலந்து வைக்கவும்.

பச்சரிசியை ஊற வைத்து, களைந்து, நிழலில் உலர்த்தி, மிஷினில் அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரை

கொதிக்க வைத்து அதில் உப்பு, எண்ணெய் சேர்த்து, அரைத்த மாவைத் தூவி கட்டியில்லாமல் கிளறவும். இறக்கி ஆற வைத்து ஈரத் துணியால் மூடி வைக்கவும்.

இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து, சிறிது பூரணத்தை வைத்து மூடி இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

தாளித்த கொழுக்கட்டை

தேவையானவை: புழுங்கல் அரிசி – ஒரு கப், வேக வைத்த கடலைப் பருப்பு, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், வேக வைத்த பாசிப்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு –

தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய் (அ) நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, ஆட்டுக்கல்லில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு,

உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, கரைத்த மாவு, வேக வைத்த பருப்புகள், சர்க்கரை, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, கையில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும். பிறகு ஆற விட்டு, சிறு

உருண்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

***********************************************************************************************

30 வகை சைட் டிஷ்!

வெண்டைக்காய் சப்ஜி

(ஒரிஸ்ஸா ஸ்பெஷல்)

தேவையானவை: வெண்டைக்காய் – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 4, தக்காளி – 2, பூண்டு – 4 அல்லது 5 பல், சீரகம் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3 அல்லது 4, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சமையல் எண்ணெய் – 4 டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காய் சிறியதாக இருந்தால் அதை அப்படியே எடுத்துக் கொள்ளவும். பெரியதாக இருந்தால் இரண்டாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெண்டைக்காயை வதக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மீண்டும் எண்ணெய் விட்டு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை வாசனை போகும் வரை சுருள வதக்கிக் கொள்ளவும்.

பிறகு வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்க்கவும். அதில், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறவும். இது கரண்டியால் எடுத்து விட்டுக் கொள்ளும் பதத்துக்கு இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். இந்த கிரேவி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். இதே போல் கோவைக்காயிலும் சப்ஜி செய்யலாம்.

——————————————————————————–

கத்தரிக்காய் ஸ்டஃப்டு வதக்கல்

தேவையானவை: கத்தரிக்காய் – கால் கிலோ, இஞ்சி – பெரிய துண்டு, பச்சைமிளகாய் – 2 அல்லது 3, கொத்தமல்லி – ஒரு சிறிய கட்டு, கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 4 அல்லது 5 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கத்தரிக்காயை ஸ்டஃப் செய்யவதற்கு ஏற்ற வகையில் வெட்டி, லேசாக வேக வைக்கவும். இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை தண்ணீர் விடாமல் அரைத்து, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். இந்தக் கலவையை கத்தரிக்காயின் உள்ளே அடைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு தாளித்து அதில் மசாலா அடைத்து வைத்துள்ள கத்தரிக்காய்களை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து சுருள வதக்கவும்.

——————————————————————————–

காராமணி சப்ஜி

தேவையானவை: காராமணி – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 2, உருளைக்கிழங்கு – 2, தக்காளி – 3, பச்சைமிளகாய் – 2, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 4 பல், கொத்தமல்லி, பட்டை – சிறிதளவு, சோம்பு – அரை டீஸ்பூன், பெரிய ஏலக்காய் – 2, கிராம்பு – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், ஆம்சூர் பொடி – அரை டீஸ்பூன், தனியாதூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காராமணியை நன்றாக கழுவி, ஒரு அங்குல நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நான்கு துண்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி, பட்டை, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பச்சைமிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள வெங்காயத்தை பொடியாக நறுக்கி, எண்ணெயில் வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்திருக்கும் காராமணியை பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து அதில் மஞ்சள்தூள், உப்பு, ஆம்சூர் பொடி, தனியாதூள் ஆகியவற்றை சேர்க்கவும். காராமணி வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவை, வதக்கிய வெங்காயம், உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

——————————————————————————–

கோஸ் மசாலா

தேவையானவை: முட்டைகோஸ் – அரை கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், தக்காளி – 1, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 2 பல், உருளைக்கிழங்கு – 2, தக்காளி – 2, பச்சைமிளகாய் – 1, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், நெய் கலவை – தேவையான அளவு, பட்டை – 4 துண்டு, கிராம்பு – 2, கருஞ்சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவை யான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 டீஸ்பூன் ஆகியவற்றை நைஸாக அரைத்துக் கொள்ளவும். பட்டை, கிராம்பு, கருஞ்சீரகத்தை எண்ணெய் விடாமல் வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் தனித்தனியாக எண்ணெயில் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் முட்டை கோஸ் போட்டு வதக்கி, அதில் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். நன்றாக வெந்ததும் வதக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் பொடித்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்துக் கிளறவும். கடைசியில் பொடியாக நறுக்கிய தக்காளி, வதக்கிய வெங்காயம், கொத்தமல்லியை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

——————————————————————————–

சுரைக்காய் கோஃப்தா

தேவையானவை: சுரைக்காய் – அரை கிலோ, பனீர் – 200 கிராம், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் – 3, கடலைமாவு – ஒரு கப், இஞ்சி – ஒரு துண்டு, தனியாதூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சுரைக்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும். பனீரை உதிர்த்துக் கொள்ளவும். சுரைக்காய், பனீர் இவற்றுடன் கடலைமாவு, சீரகத்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும். அவற்றை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து தனியாக வைக்கவும்.

கிரேவி செய்ய தேவையானவை: பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, பூண்டு – 4 பல், காய்ந்த மிளகாய் – 2, சீரகம் – கால் டீஸ்பூன், துருவிய இஞ்சி – சிறிதளவு, தனியாதூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெறும் கடாயில் காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுத்து நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து சுருள வதக்கவும். பிறகு பொடித்து வைத்திருக்கும் மசாலா பொடியை சேர்க்கவும். அதில் சிறிது தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், தனியாதூள் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். பிறகு பொரித்து வைத்திருக்கும் கோஃப்தாக்களைப் போட்டு கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

——————————————————————————–

முள்ளங்கி மசாலா கறி

தேவையானவை: வெள்ளை முள்ளங்கி – அரை கிலோ, உருளைக்கிழங்கு – 1, வெங்காயம் – 1, இஞ்சி – ஒரு துண்டு, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முள்ளங்கி, உருளைக்கிழங்கை வேக வைத்து கைகளால் பொடிமாஸ் போல் உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, இஞ்சி, பச்சைமிளகாயை தாளித்து வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.

உதிர்த்து வைத்திருக்கும் முள்ளங்கி, உருளைக்கிழங்கை சேர்க்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும். கடைசியில் கரம் மசாலாத்தூள் சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கிளறவும். கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

——————————————————————————–

முள்ளங்கி இலை கறி

தேவையானவை: வெள்ளை முள்ளங்கி இலை – ஒரு சிறிய கட்டு, பச்சைமிளகாய் – 2, வெங்காயம் – 2, கடுகு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முள்ளங்கி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் கீறிய பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும். பிறகு முள்ளங்கி இலையை போட்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து சுருள கிளறி இறக்கவும்.

——————————————————————————–

கோவைக்காய் – உருளை வதக்கல்

தேவையானவை: கோவைக்காய் – அரை கிலோ, உருளைக்கிழங்கு – 2, மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கோவைக்காயையும் உருளைக்கிழங்கையும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அதில் கோவைக்காய், உருளைக்கிழங்கை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மூடவும். இடையிடையே நீர் தெளித்து நன்றாக வேக விடவும். கடைசியில் தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் விட்டு சுருள வதக்கவும்.

——————————————————————————–

பீன்ஸ் சப்ஜி

தேவையானவை: பீன்ஸ் – கால் கிலோ, வெங்காயம் – 2, பூண்டு – 2 பல், காய்ந்த மிளகாய் – 2, தனியா – ஒரு டீஸ்பூன், பட்டை – 2 துண்டு, சோம்பு, கசகசா – தலா ஒரு டீஸ்பூன், வெல்லம் – ஒரு சிறிய கட்டி, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பீன்ஸ் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், தனியா, பட்டை, சோம்பு, கசகசாவை சிறிது எண்ணெயில் வறுத்து, புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் இரண்டு பல் பூண்டை தட்டிப் போட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போடவும். வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய பீன்ஸை சேர்க்கவும். சிறிது வதக்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு வேக விடவும். பீன்ஸ் நன்றாக வெந்ததும் சிறு துண்டு வெல்லம் சேர்க்கவும். காரம் தூக்கலாக தேவைப்பட்டால் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

கடைசியில் சிறிதளவு நெய் விட்டால் நன்றாக இருக்கும்.

——————————————————————————–

பீட்ரூட் மசாலா கறி

தேவையானவை: பீட்ரூட் – கால் கிலோ, வெங்காயம் – 2, தக்காளி – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, மிளகுத்தூள் – முக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, சோம்பு தாளித்து, வெங்காயம், தக்காளி இரண்டையும் வதக்கிக் கொள்ளவும். நறுக்கிய பீட்ரூட்டை போட்டு வேகும் அளவுக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடவும். காய் நன்றாக வெந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மிளகுத்தூளை போட்டு 5 நிமிடம் வதக்கவும். காரம் தேவைப்பட்டால் மேலும் சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

——————————————————————————–

புடலங்காய்-புதினா மசாலா

தேவையானவை: புடலங்காய் – கால் கிலோ, புதினா இலைகள் – 2 டீஸ்பூன், வெங்காயம் – 2, இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 2, பூண்டு – 2 பல், ஏலக்காய் – 2, கிராம்பு – 2 அல்லது 3, ஒமம் – அரை டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புடலங்காயை விரல் நீளத்துக்கு நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், பொட்டுக்கடலையை தனியாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பு, ஏலக்காய், கிராம்பு, ஓமம், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதில் புடலங்காயை சேர்த்து வதக்கி, தண்ணீர் விட்டு வேக விடவும்.

மஞ்சள்தூள், உப்பு, பொட்டுக்கடலை – தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும். இறக்கும் சமயத்தில் புதினா இலையை பொடியாக நறுக்கி சேர்த்து பரிமாறவும்.

——————————————————————————–

கேரட் – பனீர் குருமா

தேவையானவை: கேரட் – கால் கிலோ, பனீர் – அரை கப், இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 2, பூண்டு – 2 பல், வெங்காயம் – 4, தக்காளி – 4, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், பட்டை – 4 துண்டு, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, பிரிஞ்சி இலை – 2, கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை அவியலுக்கு நறுக்குவது போல் நீளமாகவும், வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, சிறிது வெங்காயத்துடன் அரைத்து வைத்துள்ள விழுதுப் போட்டு வதக்கவும். கேரட், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும். தக்காளி, மீதமுள்ள வெங்காயம் இரண்டையும் லேசாக வதக்கி சேர்க்கவும். பட்டை, ஏலக்காய், கிராம்பை பொடித்து இதில் கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். இறுதியில் பனீரை சிறு துண்டுகளாக நறுக்கி, வதக்கி சேர்க்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

——————————————————————————–

ஆலு கடுகு சப்ஜி

தேவையானவை: உருளைக்கிழங்கு – அரை கிலோ, காய்ந்த மிளகாய் – 5, கடுகு – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன், தக்காளி – 2, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். கடுகு, மிளகாய் இரண்டையும் அம்மியில் வைத்து அரைக்கவும் (இது மிக்ஸியில் சரியாக அரைபடாது). கடாயில் எண்ணெய் காய்ந்ததும் உருளைக்கிழங்கை நன்றாக வதக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விடவும். அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் கொட்டிக் கிளறவும். நன்றாக கொதித்ததும் பொடியாக நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

——————————————————————————–

ஆலு-மட்டர்-பனீர் மசாலா

தேவையானவை: உருளைக்-கிழங்கு – அரை கிலோ, உரித்த பச்சை பட்டாணி – ஒரு கப், தக்காளி – 4, பனீர் (அ) சீஸ் – அரை கப், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், ஏலக்காய் – 2, பிரிஞ்சி இலை – 1, பூண்டு – 5 பல், இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 3, வெங்காயம் – 2, கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், ஆம்சூர் பொடி – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து ஒன்றிரண்டாக உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பனீரை சிறு துண்டுகளாக நறுக்கவும். ஏலக்காய், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயத்தில் பாதியை சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி தனியே வைக்கவும். வெறும் கடாயில் பனீர் துண்டுகளை சிவக்க வறுக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, பட்டாணியை வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தக்காளியை சேர்த்து சுருள கிளறவும். தக்காளி வதங்கியதும் உதிர்த்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.

பிறகு தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி போட்டு கொதிக்க விடவும். கிரேவி கெட்டியாகும்போது பனீர் துண்டுகள், வெங்காயத்தை சேர்த்துக் கிளறி, கொதி வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

——————————————————————————–

உருளை-பட்டாணி மசாலா

தேவையானவை: வெங்காயம் – 2, உருளைக்கிழங்கு – 5, பச்சை பட்டாணி – அரை கப், தக்காளி – 2, பூண்டு – 4 பல், இஞ்சி – ஒரு துண்டு, கொத்தமல்லி – சிறிதளவு, பச்சைமிளகாய் – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், கிராம்பு – 2, பட்டை – 4, 5 துண்டுகள், பிரிஞ்சி இலை – 2, கடுகு – அரை டீஸ்பூன், ஏலக்காய் – 2 மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பிரிஞ்சி இலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய், சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பட்டையை அரைத்து சேர்த்துக் கிளறி, பச்சை பட்டாணி, தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி உருளைக்கிழங்கை கையால் உதிர்த்து சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து கிளறி, கொத்த மல்லியை தூவி பரிமாறவும்.

——————————————————————————–

ஆலு-மட்டர் தால்

தேவையானவை: துவரம்பருப்பு – கால் கிலோ, சோம்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், வெங்காயம் – 2, பூண்டு – 6 பல், இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 2, தக்காளி – 2, உருளைக்கிழங்கு – 2, பட்டாணி – அரை கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பருப்பு, உருளைக்கிழங்கு, பட்டாணியை குக்கரில் மசிய வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாயை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், சோம்பு, பூண்டை வதக்கி, வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் வெந்த பருப்பையும் சேர்க்கவும். உருளைக் கிழங்கை மசித்து போடவும். பிறகு மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, ஒரு கொதி வந்ததும் தக்காளியை சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் இறக்கவும். இது கரண்டியால் எடுத்து விடும் அளவுக்கு நீர்க்க இருத்தல் வேண்டும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

உருளைக்கிழங்கு மசியல்

தேவையானவை: உருளைக்கிழங்கு – அரை கிலோ, பெரிய எலுமிச்சம் பழம் – 1, கசகசா – ஒரு டீஸ்பூன், தேங்காய், – ஒரு சிறிய மூடி, இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து மசிக்கவும். தேங்காய், கசகசாவை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாயை தாளித்து, மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். கரண்டியால் எடுத்து விடும் பதத்துக்கு தண்ணீர் சேர்க்கவும். இரண்டு கொதி வந்ததும் தேங்காய், கசகசா விழுது, கொத்தமல்லி சேர்க்கவும். பிறகு, இரண்டு கொதி வந்ததும் இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

——————————————————————————–

நவரத்ன குருமா

தேவையானவை: வெங்காயம் – 2, தக்காளி – 3, பச்சை பட்டாணி – ஒரு டீஸ்பூன், இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 2, பூண்டு – 4 பல், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு – 2, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பீன்ஸ் – சிறிதளவு, கேரட் – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மூன்றையும் நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு கசகசா, முந்திரிப்பருப்பு இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் அனைத்தையும் ஒரே அளவில் நறுக்கி, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். அரைத்த தக்காளியை சேர்த்து கொதிக்க விடவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் வெந்த காய்களை சேர்க்கவும்.

இதில் கசகசா, முந்திரிப்பருப்பு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். தனியாக ஒரு கடாயில் முந்திரியை வறுத்து இதனுடன் சேர்க்கவும். கொத்தமல்லி தூவி இறக்கவும்.

——————————————————————————–

முருங்கை தால்

தேவையானவை: முருங்கைக்காய் – 7 அல்லது 8, துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 2, தக்காளி – 2, உருளைக்கிழங்கு – 1, இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 2, பூண்டு – 2 பல், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முருங்கைக்காயைச் சாம்பாருக்கு நறுக்குவது போல் நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பு, முருங்கைக்காய், உருளைக்கிழங்கை வேக வைக்கவும். வெந்த முருங்கைத் துண்டுகளில் இருக்கும் சதைப் பகுதியை ஒரு ஸ்பூனால் எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து உதிர்த்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை வதக்கி, அதில் தக்காளி, முருங்கைக்காயின் சதைப் பகுதி, துவரம்பருப்பைப் போட்டு உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். உதிர்த்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

——————————————————————————–

பச்சை பயறு குருமா

தேவையானவை: பச்சை பயறு – அரை கப், உருளைக்கிழங்கு – 2, கொத்தமல்லி – சிறிதளவு, வெங்காயம் – 2, தக்காளி – 1, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 2 பல், பச்சைமிளகாய் – 2, பட்டை – ஒரு துண்டு, பிரிஞ்சி இலை – 1, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சை பயறை ஊற வைத்து முளைக் கட்டவும். ஊறிய பயறை மெல்லிய துணியில் மூட்டையாக கட்டி, கொதிக்கும் நீரில் அரை மணி நேரம் போடவும். இப்படி செய்வதால் பயறு அரை வேக்காடாக வெந்துவிடும். உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், தட்டிய இஞ்சி, பூண்டு, கீறிய பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை பயறையும் சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வேக வைத்த உருளைக்கிழங்கை சதுரமாக நறுக்கி சேர்க்கவும். தேவைப்பட்டால் காரப்பொடி சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கடைசியில் சேர்க்கவும்.

——————————————————————————–

வெண்டை – உருளை கிரேவி

தேவையானவை: வெண்டைக்காய் – கால் கிலோ, உருளைக்கிழங்கு – 2, தக்காளி – 1, கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், தனியாத்தூள் – அரை டீஸ்பூன், ஆம்சூர் பொடி- அரை டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயை கழுவி, பெரியதாக இருந்தால் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். சிறியதாக இருந்தால் அப்படியே மேல்புறம் லேசாக கீறிக் கொள்ளவும். ஈரம் காய்ந்ததும் எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து, சிறு சதுர துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பிரிஞ்சி இலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இதில் பொரித்த வெண்டைக்காய் (எண்ணையை நன்றாக வடித்துக் கொள்ளவும்), வதக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள், ஆம்சூர் பொடி, பொடியாக நறுக்கிய தக்காளி இவற்றை சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

——————————————————————————–

சௌசௌ சப்ஜி

தேவையானவை: சௌசௌ – 2, உருளைக்கிழங்கு – 1, வெங்காயம் – 2, பச்சை பட்டாணி – அரை கப் , இஞ்சி – ஒரு துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய்துருவல் – 3 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, கடுகு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சௌசௌவை பொடியாக நறுக்கவும். பச்சை பட்டாணியையும் உருளைகிழங்கையும் வேக வைக்கவும். தேங்காய்துருவல், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் வேக வைத்துள்ள காய்கறிகளையும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

——————————————————————————–

உருளை நவதான்ய மசாலா

தேவையானவை: காய்ந்த பச்சை பட்டாணி, வெள்ளை பட்டாணி, ராஜ்மா, காராமணி, மொச்சை, பச்சை பயறு, வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, பீன்ஸ் விதை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு, தக்காளி – தலா 2, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 4 அல்லது 5 பல், பச்சைமிளகாய், வெங்காயம் – தலா 2, பட்டை – 2 துண்டு, சிறிய ஏலக்காய், பெரிய ஏலக்காய், கிராம்பு – தலா 2, சோம்பு, கசகசா – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள கடலைகளை முதல் நாளே ஊற வைத்துக் கொள்ளவும். உருளைகிழங்குடன் கடலைகளை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை போட்டு, நறுக்கிய வெங்காயத்தில் பாதியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.

பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், பெரிய ஏலக்காய், கசகசா, தேங்காய் இவற்றை அரைத்து சேர்க்கவும். வேக வைத்துள்ள கடலைகளையும் சேர்க்கவும். உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் போட்டு, நன்கு கொதித்தவுடன் உருளைக்-கிழங்கை உதிர்த்து சேர்க்கவும்.

பரிமாறும்போது பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தூவவும். தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளலாம்.

——————————————————————————–

ஆலு தம்

தேவையானவை: சிறிய உருளைக்கிழங்கு – அரை கிலோ, தக்காளி – 2, காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5, இஞ்சி – ஒரு துண்டு, எண்ணெய் – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பட்டை – 4 துண்டு, பூண்டு – 4 பல், வெங்காயம் – 1, பெரிய ஏலக்காய் – 2, கிராம்பு – 4, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து முழுதாக உரித்து வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், இஞ்சி, சீரகம், பட்டை, பூண்டு பல், வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். பெரிய ஏலக்காய், கிராம்பு இரண்டையும் எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் தக்காளி, மஞ்சள்தூள் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும், வேக வைத்த உருளைக்கிழங்கு, உப்பு போட்டு நன்கு கிளறவும். அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கிராம்பு, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இது, கரண்டியால் எடுத்து விட்டுக் கொள்ளும் பதத்துக்கு இருக்க வேண்டும்.

——————————————————————————–

காய்கறி ஸ்பெஷல் மசாலா

தேவையானவை: சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 2, நறுக்கிய கொத்தவரங்காய் – அரை கப், அவரைக்காய் – கால் கப், சேப்பங்கிழங்கு – கால் கப், கத்தரிக்காய் – கால் கப், பரங்கிக்காய் – அரை கப், பூசணிக்காய் – கால் கப், கறிவேப்பிலை – சிறிது, புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, தனியா, மிளகு – தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சமையல் எண்ணெய் – 2 டீஸ்பூன், தேங்காய்துருவல் – அரை கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: எல்லா காய்களையும் புளி தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பதமாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சீரகம், துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய்துருவல், தனியா, மிளகு போட்டு வறுத்து, அரைத்து, வெந்து கொண்டிருக்கும் காய்கறிகளுடன் சேர்க்கவும். அதில் கரம் மசாலாத்தூள் போடவும். நன்றாக கொதித்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். மேலே சிறிது நெய் விட்டு பரிமாறவும்.

——————————————————————————–

ஸ்பெஷல் கலவை மசாலா கறி

தேவையானவை: காலிஃப்ளவர் அல்லது முட்டைகோஸ் – கால் கிலோ, பட்டாணி அல்லது பீன்ஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், சிறிய கேரட் – 2, வெங்காயம் – 2, குடைமிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 1, தனியா – அரை டீஸ்பூன், பெரிய ஏலக்காய் – 1, கிராம்பு – 2, சின்ன ஏலக்காய் – 2, பட்டை – 1 துண்டு, சோம்பு – கால் டீஸ்பூன், மிளகு – கால் டீஸ்பூன், சீரகத்தூள், கடுகு, சுக்கு – தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – அரை டீஸ்பூன், தாளிக்க சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடுகை தவிர மற்ற மசாலா பொருட்களை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங் காயத்தை பொன்னிறமாக வதக்கி, காய்கறி களை சேர்க்கவும். சிறிது வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து சுருள வதக்கவும். காய்கள் முக்கால் பதம் வெந்ததும் பொடித்த மசாலாவை சேர்க்கவும். மசாலா நன்கு சேர்ந்து வந்ததும் இறக்கவும்.

——————————————————————————–

காலிஃப்ளவர் பெங்காலி சப்ஜி

தேவையானவை: நடுத்தர காலிஃப்ளவர் – 2, தக்காளி – கால் கிலோ, உருளைக்கிழங்கு – கால் கிலோ, இஞ்சி துருவல் – சிறிதளவு, ஆம்சூர் பொடி – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், சீரகத்தூள் – 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் – சிறிதளவு, பச்சை பட்டாணி – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை நறுக்காமல் கையால் சிறு துண்டுகளாக ஆய்ந்து கொள்ளவும். சிறிது உப்பு கலந்து மிதமான வெந்நீரில் இருபது நிமிடம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, உரித்து பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் உருளைக்கிழங்கை சிவக்கும் வரை வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். 4 டீஸ்பூன் எண்ணெயில் காலிஃப்ளவரை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் காய்ந்ததும் தேங்காய்துருவல், சீரகத்தூளை சேர்த்து, காலிஃப்ளவர், தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், ஆம்சூர் பொடியை சேர்க்கவும். கலவை வெந்ததும் பச்சை பட்டாணியை சேர்த்துக் கிளறவும். நன்றாகக் கொதி வந்ததும் உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய தக்காளி, கொத்தமல்லியை சேர்த்து 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கவும்.

——————————————————————————–

முருங்கை மசாலா சப்ஜி

தேவையானவை: நன்கு முற்றிய முருங்கைக்காய் – 10 அல்லது 15, தக்காளி – 1, பெரிய உருளைக்கிழங்கு – 2, இஞ்சி – ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் – 2, பூண்டு – 4 பல், கொத்தமல்லி – சிறிதளவு, பிரிஞ்சி இலை – 2, பட்டை – சிறு துண்டு, கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய ஏலம் – 2, கிராம்பு – 2, ஆம்சூர் பொடி – ஒரு டீஸ்பூன், பச்சை பட்டாணி – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முருங்கைக் காயை நன்கு கழுவியதும், சாம்பாருக்கு வெட்டுவது போல் வெட்டி, குக்கரில் வேக வைக்கவும். இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாயைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். பட்டை, கசகசா, கிராம்பு மற்றும் ஏலக்காயை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும். இந்த மசாலாத்தூள் நல்ல வாசனையாக இருக்கும். வெந்த முருங்கைக்காயின் சதைப்பகுதியை மட்டும் ஒரு கத்தியால் கீறி எடுக்கவும். இதைத் தனியாக ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.

உருளைக்கிழங்கை தோல் உரித்து கையால் ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலையைக் கிள்ளிப் போட்டு சிவக்க விடவும். இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் உருளைக்கிழங்கு, முருங்கைக் கலவை, பச்சை பட்டாணி, பொடித்து வைத்த மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அடி பிடிக்காமல் கிளறவும். தீயை குறைத்து உப்பு, கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடியை போட்டு நன்றாக கலக்கவும். தக்காளி யையும் கொத்துமல்லியையும் பொடிப்பொடியாக நறுக்கி போட்டு நன்றாகக் கலந்து, பட்டாணி வெந்ததும் இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

——————————————————————————–

காலிஃப்ளவர் மசாலா சப்ஜி

தேவையானவை: நடுத்தர காலிஃப்ளவர் – 2, தக்காளி – கால் கிலோ, உருளைக்கிழங்கு – கால் கிலோ, இஞ்சித் துருவல் – சிறிதளவு, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, பூண்டு – 7 அல்லது 8 பல், வெங்காயம் – 4, கிராம்பு – 4, தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், – தலா ஒரு டீஸ்பூன், பச்சை பட்டாணி – ஒரு டீஸ்பூன், ஏலக்காய் – 2, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை கைகளால் ஆய்ந்து, உப்பு கலந்த மிதமான வெந்நீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் சிறிதளவு, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள வெங்காயத்தை எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் கலவையை விட்டு மசாலா விழுதைப் போட்டு சுருளாக வதக்கிக் கொள்ளவும். உருளையை சிவக்க வதக்கி காலிஃப்ளவரைப் போட்டுக் கிளறவும். மசாலா விழுது, உப்பு, மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் வீட்டு அடுப்பை ‘சிம்’மில் வைத்து மூடவும். நன்றாக கொதித்ததும் பட்டாணி சேர்த்துக் கிளறவும். வதக்கிய வெங்காயத்தைச் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். கூட்டு மாதிரி வரும். பிறகு இறக்கி நறுக்கிய தக்காளி, கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.

——————————————————————————–

சின்ன வெங்காயம் – தக்காளி மசாலா

தேவையானவை: சின்ன வெங்காயம், தக்காளி – கால் கிலோ, பச்சை மிளகாய் – 2, கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 2, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். இதில் பாதி எடுத்து தக்காளி சேர்த்து லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, மீதமுள்ள வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். முழு பச்சைமிளகாயை சேர்க்கவும். இந்த வதக்கலுடன் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும். மஞ்சள்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், சர்க்கரை சேர்த்து கிளறி நன்கு கொதி வந்ததும் இறக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடலாம். காரம் தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

*****************************************************************