Wednesday, December 23, 2009

30 வகை கொழுக்கட்டை

30 வகை கொழுக்கட்டை

பனை ஓலை கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – முக்கால் கிலோ, கருப்பட்டி – அரை கிலோ, ஏலக்காய் – 10, தேங்காய் – ஒரு

மூடி, பனை (அ) தென்னை ஓலை – 1.

செய்முறை: பச்சரிசியை ஊற வைத்து, களைந்து நிழலில் உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். கடாயை காய வைத்து, துருவிய தேங்காயை ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவலைப் போடவும். கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து இளம்பாகு பதத்தில் காய்ச்சவும். இறக்கி வடிகட்டி, மாவுடன் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

ஓலையை அரை அடி நீளத்துக்கு நறுக்கி, பிசைந்த மாவை அதன் நடுவில் வைத்து, இட்லி தட்டில் வேக விட்டு எடுக்கவும்.

————————————————————————–

——

பால் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, பால் – அரை லிட்டர், சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் – 6,

முந்திரி பருப்பு – 10, நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி நிழலில் உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவைக் கொட்டி தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்தில் பிசைந்து, அதை சீடை அளவில் சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் உருட்டிய கொழுக்கட்டைகளைப் போடவும். வெந்ததும் வடித்துக் கொள்ளவும். வடித்த தண்ணீரில் பாலை சேர்த்துக் காய்ச்சி, சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்தவுடன் வேக வைத்த கொழுக்கட்டை, பொடித்த ஏலக்காயை சேர்க்கவும்.

முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

————————————————————————–

——

பச்சரிசி சர்க்கரை கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் – 3,

பச்சை கற்பூரம் – சிறிதளவு.

செய்முறை: பச்சரிசியை ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டி நிழலில் உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி லேசாக வறுத்துக் கொள்ளவும். ஏலக்காய், பச்சை கற்பூரத்தைப் பொடித்துக் கொள்ளவும்.

பச்சரிசி மாவில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலம், பச்சை கற்பூரத்தை சேர்த்து, தண்ணீர் தெளித்து பதமாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டுகளில் பரப்பி வேக வைக்கவும்.

வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

————————————————————————–

——

பச்சரிசி கருப்பட்டி கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, கருப்பட்டி – ஒன்றரை கப், ஏலக்காய் – 6,

எள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை நன்றாக ஊறவைத்து களைந்து, நிழலில் உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். கருப்பட்டியை இளம்பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி லேசாக

வறுத்துக் கொள்ளவும். மாவுடன் பொடித்த ஏலக்காய், எள், கருப்பட்டிப் பாகு, தேங்காய் துருவலை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் பரப்பி வேக வைக்கவும்.

வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

————————————————————————–

——

புழுங்கலரிசி தேங்காய் கொழுக்கட்டை

தேவையானவை: புழுங்கலரிசி – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் – 6.

செய்முறை: புழுங்கலரிசியை கல், தூசு நீக்கி மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன், ஏலக்காய், தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டு பிசையவும். கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வேக
வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

கோதுமை சர்க்கரை கொழுக்கட்டை

தேவையானவை: கோதுமை – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் – 6.

செய்முறை: கோதுமையை லேசாக வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி, வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் வறுத்த தேங்காய், சர்க்கரை, பொடித்த ஏலக்காய், தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் அடுக்கி வேக வைக்கவும். வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

————————————————————————–

——

தேங்காய் ரவை கொழுக்கட்டை

தேவையானவை: ரவை, சர்க்கரை – தலா ஒன்றரை கப், அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் – ஒரு மூடி, ஏலக்காய் – 6, வெனிலா எசன்ஸ் – 2 துளி.

செய்முறை: தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். ரவையுடன் அரிசி மாவு, சர்க்கரை, பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல், வெனிலா எசன்ஸ் சேர்த்து வெந்நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

தேங்காய் பூந்தி கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, இனிப்பு பூந்தி – ஒரு கப், சர்க்கரை – அரை கப், தேங்காய் – ஒரு மூடி, ஏலக்காய் – 6.

செய்முறை: பச்சரிசியை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுக்கவும்.

ஏலக்காயைப் பொடிக்கவும். இவற்றை பூந்தி, சர்க்கரையுடன் சேர்த்து, லேசாக மசித்துக் கொள்ளவும்.

அரைத்த மாவில் தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு பக்குவத்தில் பிசைந்து மெல்லிய கிண்ணம்போல் செய்து கொள்ளவும். அதில் மசித்து வைத்துள்ள பூந்திக் கலவையில் சிறிது போட்டு மூடவும். பிறகு இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்

————————————————————————–

——

வெல்ல மோதக கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, வெல்லம் – ஒன்றரை கப், ஏலக்காய் – 6, தேங்காய் – 1.

செய்முறை: பச்சரியை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும்.

ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தை இளம் பாகாய்க் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன், ஏலக்காய் பொடி, வெல்லப்பாகு சேர்த்து உருண்டை உருட்டும் பதத்தில் கலந்து கொள்ளவும்.

மாவுடன் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, மெல்லியதாக தட்டிக் கொள்ளவும். செய்து வைத்துள்ள தேங்காய் பூரணத்தில் சிறிது எடுத்து மாவினுள் வைத்து ஓரங்களை மூடி இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

பழ கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒன்றரை கப், உப்பு – ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் – அரை கப், துருவிய தேங்காய் – அரை மூடி, பலாச்சுளை – 15, ஆப்பிள், மாம்பழம், பச்சை
வாழைப்பழம் – தலா 1, டால்டா – 2 டீஸ்பூன்.

செய்முறை: பலாச்சுளையின் கொட்டையை நீக்கி பொடியாக நறுக்கவும். வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழத்தின் தோலை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பழங்களை வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். ஒரு கொதி வந்ததும், துருவிய தேங்காயையும், பொடி செய்த வெல்லத்தையும் போட்டு தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் கிளறிக் கொண்டேயிருக்கவும். பிறகு டால்டாவை விட்டு சுருளக் கிளறி, இறக்கி ஆற விடவும். இதை சிறிய கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஒரு
தட்டில் வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீரை அளவாக வைத்து கொதிக்க விட்டு அதில் எண்ணெய், உப்பு, சேர்க்கவும். பிறகு அரிசி மாவை இதில் கொட்டி கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். சற்று ஆறியதும் கிண்ணம் போல் செய்து, அதன் நடுவில் பழக்கலவையை வைத்து மூடவும். இப்படி எல்லாவற்றையும் செய்த பிறகு இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

பேரீச்சம்பழ கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – அரை கிலோ, கொட்டை நீக்கி பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழ துண்டுகள் – ஒரு கப், முந்திரி துண்டுகள் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு கப், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு, சூடானதும் முந்திரி, பேரீச்சம்பழத்தைப் போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் கழித்து வெல்லத்தூள் சேர்த்து கிளறி, பூரணம் பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி வைக்கவும்.

கொதிக்கும் தண்ணீரில் அரிசிமாவு, உப்பு சேர்த்துக் கிளறி வேகவிட்டு இறக்கவும். வெந்த மாவில் சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து பேரீச்சம் பழ பூரணத்தை வைத்து மூடி, இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

இரும்பு சத்து நிறைந்த சத்தான கொழுக்கட்டை இது.

————————————————————————–

——

கம்பரிசி இனிப்பு கொழுக்கட்டை

தேவையானவை: கம்பரிசி – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, கருப்பட்டி – அரை கிலோ, ஏலக்காய் – 6.

செய்முறை: கம்பரிசியை லேசாக வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும். கருப்பட்டியை இளம்பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டவும். பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல், கருப்பட்டி பாகை மாவுடன் சேர்த்து (வறுத்த மாவு

என்பதால், தண்ணீர் அதிகம் தேவைப்படும். பாகுடன் சிறிது வெந்நீர் சேர்த்துக் கொள்ளலாம்) கொழுக்கட்டை பதத்தில் பிசையவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

————————————————————————–

——

ரவை கொழுக்கட்டை

தேவையானவை: ரவை – ஒன்றரை கப், அரிசி மாவு – ஒரு கப், கடலைப் பருப்பு – கால் கப், கேரட் – 2 (துருவிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் – 4 (மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்), உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலைப் பருப்பை முக்கால் பதத்தில் வேக வைத்துக் கொள்ளவும். ரவையுடன் அரிசிமாவு, வேக வைத்த கடலைப் பருப்பு, துருவிய கேரட், அரைத்த மிளகாய், உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு நன்றாகப் பிசையவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

உப்பில்லா கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – அரை கிலோ, நெய் – 25 கிராம், தேங்காய் – அரை மூடி.

செய்முறை: பச்சரிசி மாவில் தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். ஈரத் துணியில் வைத்து சிறு தட்டைகளாக தட்டிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். தட்டி
வைத்துள்ள கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக கொதி நீரில் போடவும். வெந்ததும் தண்ணீரை வடிகட்டி கொழுக்கட்டைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு நெய், தேங்காய் துருவல் கலந்துபிசறி சாப்பிடவும்.

————————————————————————–

——

பருப்பு கொழுக்கட்டை கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, கடலைப் பருப்பு – 100 கிராம், வெல்லம் – 300 கிராம், தேங்காய் – ஒரு மூடி, ஏலக்காய் – 6.

செய்முறை: பச்சரிசியை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி வறுத்துக் கொள்ளவும், ஏலக்காயை மிக்ஸியில் ஓன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தை இளம்பாகாகக்
காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பிறகு இதில் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி, கடலைப் பருப்பு சேர்த்து உருட்டும் பதத்தில் செய்து கொள்ளவும்.

பச்சரிசி மாவைப் பிசைந்து மெல்லியதாக கிண்ணம் போல் செய்து, அதில் பூரணத்தை வைத்து ஓரங்களை மூடி, இட்லித் தட்டில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

————————————————————————–

——

அவல் கார கொழுக்கட்டை

தேவையானவை: அவல் – கால் கிலோ, பச்சரிசி மாவு – அரை கிலோ, உப்பு – தேவையான அளவு, பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – 3, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி (பொடியாக

நறுக்கிக் கொள்ளவும்) – சிறிதளவு, துருவிய கேரட் – ஒரு கப், கடுகு, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அவலை தண்ணீரில் நன்றாகக் களைந்து பிழிந்து வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அவல், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட், உப்பு சேர்த்து வதக்கவும். கார பூரணம் ரெடி!

கொதிக்கும் தண்ணீரில் பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் மரக் கரண்டியால் கிளறவும். வெந்ததும் இறக்கி, மாவை கிண்ணம் போல் செய்து, அதில் அவல் பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வேக வைத்து இறக்கிப் பரிமாறவும்.

நீர் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், கெட்டியான தேங்காய்ப் பால் – அரை கப், இரண்டாவது தேங்காய்ப் பால் – 2 கப், உப்பு – தேவையான அளவு, சீரகம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: 2 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதித்த தண்ணீரை சிறிது சிறிதாக மாவில் விட்டு, சிறிது உப்பு சேர்த்து, கெட்டியாகக் கிளறவும்.

கிளறிய மாவை நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும். இரண்டாவது தேங்காய்ப் பாலை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கொதிக்கும் பாலில் சீரகம், உருண்டைகளைப் போட்டு மிதமான தீயில் 8 நிமிடம் வேகவிடவும். நன்கு வெந்ததும் முதல் பாலை விட்டு கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

————————————————————————–

——

புதினா கொழுக்கட்டை

தேவையானவை: புதினா – ஒரு கட்டு, பச்சை மிளகாய், தக்காளி – தலா 1, பச்சரிசி மாவு – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 3, சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புதினாவை ஆய்ந்து, கழுவி சுத்தம் செய்து, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீரை நன்றாகக்

கொதிக்க வைத்து அதில் உப்பு, அரைத்த புதினா விழுது, வெங்காயம், சீரகம் சேர்த்து, மாவை சிறிது சிறிதாகப் போட்டுக் கட்டியில்லாமல் கிளறி, வெந்ததும் இறக்கவும்.

இந்த மாவை சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து 4 விரல்களும் பதியும் படி மூடி திறக்கவும். எல்லா மாவையும் இதுபோலவே பிடி கொழுக்கட்டைகளாக செய்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

கோவா கொழுக்கட்டை

தேவையானவை: மைதா மாவு – ஒரு கப், சர்க்கரை – அரை கப், பால்கோவா – கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, குங்குமப்பூ – சிறிது, பால் – அரை லிட்டர்.

செய்முறை: மைதாவை சலித்து உப்பு, தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பாலில் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சி, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பிசைந்த மாவில் சிறிது எடுத்து கிண்ணம்

போல் செய்து, அதில் சிறிது பால்கோவாவை வைத்து சமோசா வடிவில் மடித்து ஓரங்களை ஒட்டவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொழுக்கட்டைகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

இந்த கொழுக்கட்டைகளை காய்ச்சிய பாலில் போட்டுப் பரிமாறவும்.

————————————————————————–

——

இனிப்பு அவல் கொழுக்கட்டை

தேவையானவை: அவல் – கால் கிலோ, தேங்காய் துருவல் – ஒரு கப், அரிசி மாவு – அரை கிலோ, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை: அவலை சுத்தம் செய்து தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து வடித்து, தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் கலந்து வைத்துக் கொள்ளவும்.

தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, அரிசிமாவைப் போட்டு கட்டியில்லாமல் கிளறவும். இந்த மாவில் கிண்ணம் போல் செய்து, அதனுள் அவல் பூரணத்தை வைத்து மூடி,

இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

வெஜிடபிள் கொழுக்கட்டை

தேவையானவை: உருளைக்கிழங்கு – 4, கேரட், பீட்ரூட், நூல்கோல் – தலா 1, முட்டைகோஸ், பீன்ஸ் – தலா 50 கிராம், காலிஃபிளவர் – சில துண்டுகள், இஞ்சி – ஒரு துண்டு, பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் –

8, எலுமிச்சம்பழம் – 1, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை: எல்லா காய்களையும் நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி தண்ணீர் விடாமல் ஆவியில் வேக வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு

தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் காய்கறி கலவை, சிறிது உப்பு சேர்க்கவும். கடலை மாவை சிறிதளவு தண்ணீரில்

கரைத்து இதில் விடவும். கொதித்து கெட்டியாக உருட்டும் பதத்தில் வந்ததும் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து விடவும். காய்கறி பூரணம் ரெடி!

கொதிக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய், அரிசி மாவு, உப்பு சேர்த்து, கட்டியில்லாமல் நன்றாகக் கிளறவும். இந்த மாவில் சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து, இதில் பூரணத்தை வைத்து மூடி, இட்லித்

தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

மிளகு கொழுக்கட்டை

தேவையானவை: புழுங்கலரிசி – அரை கிலோ, சிறிய தேங்காய் – 1, உப்பு – தேவையான அளவு, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – கால் கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் களைந்து ஊறவிடவும். ஊறியதும், தேங்காயை கீறிப் போட்டு உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். வெறும் கடாயில் மிளகை வறுத்து நைசாகப்
பொடித்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த மாவைப் போட்டு சுருளக் கிளறி, கையில் ஒட்டாத பதத்தில் இறக்கி ஆற விடவும். இந்த மாவில் நெல்லிக்காய் அளவு எடுத்து உருட்டி, இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும். கொழுக்கட்டையில் மிளகுத்தூள், நெய் சேர்த்து நன்கு பிரட்டி எடுத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

பாசிப்பருப்பு மடக்கு கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – அரை கிலோ, பாசிப்பருப்பு – கால் கிலோ, ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 கப், நாட்டுச் சர்க்கரை, உப்பு – தேவையான அளவு, முந்திரி பருப்பு – 10 கிராம்.

செய்முறை: பாசிப்பருப்பை வறுத்து முக்கால் பதத்தில் வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை வடித்து விட்டு நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி துண்டுகளை சேர்த்து கிளறிக் கொள்ளவும்.

பூரணம் ரெடி!

அரிசி மாவில் வெந்நீர், உப்பு, ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துப் பிசையவும். மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும் கிண்ணம் போல் செய்து, அதில் பூரணத்தை வைத்து ஓரங்களை மடித்து விட்டு, இட்லித் தட்டில் வேக
வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

உருளைக்கிழங்கு கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒன்றரை கப், உருளைக்கிழங்கு – 200 கிராம், சீரகத்தூள் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 6 (மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்), உப்பு – தேவையான அளவு, பொடியாக

நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும். அரிசி மாவுடன் பச்சை மிளகாய், வெந்த உருளைக்கிழங்கு, சீரகத்தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசையவும். இதில் சிறிது எடுத்து
கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

சென்னா கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

பூரணத்துக்கு: ஊற வைத்து வேக வைத்த சென்னா – அரை கப், பொடியாக நறுக்கிய தேங்காய், பொடியாகநறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மாங்காய் – அரை டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, நிழலில் உலர்த்தி மிக்ஸியில் நைசாக அரைத்து சலித்துக் கொள்ளவும். ஒரு கப் (ஒரு கப் மாவுக்கு ஒரு கப் தண்ணீர் விகிதம்) தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கொதிக்கும்போது ஒரு சிட்டிகை உப்பு, எண்ணெய் சேர்த்து, கொதித்ததும் மாவைத் தூவி, கட்டியில்லாமல் கிளறவும். பிறகு ஆற வைத்துப் பிசைந்து, ஈரத் துணியால் மூடி வைக்கவும்.

சென்னாவை ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்து, அதனுடன் மற்ற பொருட்களையும் கலந்து, பூரணமாக செய்து கொள்ளவும்.

பிசைந்த மாவில் சிறிது எடுத்து சிறிய கிண்ணம் போல் செய்து சென்னா பூரணத்தை நிரப்பி மூடி, இட்லித் தட்டில் வேகவிட்டு எடுக்கவும்.

————————————————————————–

——

மக்காச்சோள கொழுக்கட்டை

தேவையானவை: மக்காச்சோளம் – அரை கிலோ, சர்க்கரை – ஒன்றரை கப், தேங்காய் – ஒரு மூடி, ஏலக்காய் – 6.

செய்முறை: மக்காச்சோளத்தை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயை காய வைத்து மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுத்துக்கொள்ளவும். தேங்காய், சர்க்கரை, பொடித்த ஏலக்காயை மாவுடன் சேர்த்துப் பிசையவும். இந்த மாவில் சிறிது எடுத்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

கலர்ஃபுல் கொழுக்கட்டை

தேவையானவை: ஊற வைத்து நிழலில் உலர்த்தி, அரைத்து வறுத்த பச்சரிசி மாவு – 2 கப், 5 முதல் 6 மணி நேரம் ஊறிய ஜவ்வரிசி – ஒன்றரை டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப், குழையாமல் வேகவைத்த பாசிப்பருப்பு, நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, சீரகம் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, விருப்பப்பட்ட ஃபுட் கலரிங் – 2 (அ) 3 துளிகள்.

செய்முறை: கலர் நீங்கலாக.. மாவுடன் மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து, வெந்நீரை ஊற்றி கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை வைத்துள்ள கலர்களுக்கேற்ப பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளவும். ஒவ்வொரு வண்ணத்தையும் ஒவ்வொரு பகுதியுடன் சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வேக வைத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

ராகி கொழுக்கட்டை

தேவையானவை: ராகி மாவு – ஒரு கப், பொடித்த வெல்லம் (அ) கருப்பட்டி – அரை கப், தேங்காய் துருவல் – கால் கப், மிகவும் பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்த முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: ராகி மாவை அரை டேபிள்ஸ்பூன் நெய்யில் வறுத்து ஆறவிட்டு, அதனுடன் வெல்லம் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும். வெல்லத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைய விடவும். கரைந்ததும் வடிகட்டி மாவில் விட்டு நன்கு பிசையவும். பாகு போதவில்லையெனில் சிறிது வெந்நீரை சேர்த்துக் கொள்ளலாம். இந்த மாவில் சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து மடித்து, இட்லித் தட்டில் வேக விட்டு எடுக்கவும்.

————————————————————————–

——

டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய காய்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம், பாதாம், முந்திரி, வெள்ளரி விதை, துருவிய கொப்பரை எல்லாம் சேர்ந்தது -
அரை கப், தேன் – 2 டேபிள்ஸ்பூன், சுக்குப்பொடி – ஒரு சிட்டிகை.

செய்முறை: அத்திப்பழம், பேரீச்சம்பழம், முந்திரி, பாதாம், வெள்ளரி விதை, கொப்பரை எல்லாவற்றையும் தேனுடன் சேர்த்துப் பிசைந்து, பூரணமாகக் கலந்து வைக்கவும்.

பச்சரிசியை ஊற வைத்து, களைந்து, நிழலில் உலர்த்தி, மிஷினில் அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரை

கொதிக்க வைத்து அதில் உப்பு, எண்ணெய் சேர்த்து, அரைத்த மாவைத் தூவி கட்டியில்லாமல் கிளறவும். இறக்கி ஆற வைத்து ஈரத் துணியால் மூடி வைக்கவும்.

இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து, சிறிது பூரணத்தை வைத்து மூடி இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

தாளித்த கொழுக்கட்டை

தேவையானவை: புழுங்கல் அரிசி – ஒரு கப், வேக வைத்த கடலைப் பருப்பு, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், வேக வைத்த பாசிப்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு –

தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய் (அ) நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, ஆட்டுக்கல்லில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு,

உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, கரைத்த மாவு, வேக வைத்த பருப்புகள், சர்க்கரை, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, கையில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும். பிறகு ஆற விட்டு, சிறு

உருண்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

***********************************************************************************************

No comments:

Post a Comment