Wednesday, December 23, 2009

கருவளையம் மறைய…

ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை என பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் கருவளையத்திற்கு நிச்சயம் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். மற்ற காரணங்களால் ஏற்படும் கருவளையத்தை போக்க இதோ சில டிப்ஸ்…

*தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் மஞ்சளை குழைத்து, கண்களை சுற்றி பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து கடலை மாவால் கண்களைக் சுற்றி கழுவ கருவளையம் மறையும்.

*வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும். வெள்ளரி சாற்றிற்கு பதிலாக வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.

*பச்சை உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களை சுற்றி தடவி வர கருவளையம் மறையும்.

*தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதை தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் குணம் தெரியும்.

*வெள்ளரி சாறுடன் பன்னீர் கலந்தும் தடவலாம். ஒரு நளைக்கு இரு முறை செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

*பால் பவுடரை தண்ணீர் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களை சுற்றி பூசலாம். அதே போல் பாலாடையுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும் வரை வைத்திருக்காமல், சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.

* ஜாதிக்காயை அரைத்து கண்களை சுற்றி தடவி கொண்டு சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர கருவளையம் மறைந்து விடும்.

*போதிய அளவு தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகும். இதை தவிர்க்க, தினசரி 6 மணி நேரமாவது தூங்குவது அவசியம்.

பொருத்தமான மேக்கப்

கூந்தல்:

* பெண்ணோ, ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்தும் சிறப்பு கூந்தலுக்கு உண்டு. ஆனால் பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாது பலருக்கு. இதனால், நீண்ட அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக் கொள்ளும் பெண்கள் அதிகம்.

* முடி சின்னதாக இருக்கே என்று கவலைப்படாமல் நம் முடி எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்துகு கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால் எந்த மாதிரியான சிகை அலங்காரமும் அழகாகத்தான் இருக்கும். இருந்தாலும் கண் அமைப்பு, முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்துவிதமாக கொண்டை, பின்னல்களை போட்டுக்கொள்ளுங்கள்.

குட்டை முடி:

* உருண்டை முகம்: கோணல் வகிடு எடுக்காமல் தூக்கிவாரி கொள்ளலாம்.நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.

* நீளமுகம்: ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கம் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும். * அகலமான முகம்: முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும் அளவுக்கு வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.

* அகலமான நெற்றி: முன்பக்க முடியை சற்று எடுத்து ஃப்ரிஞ்ச் எனப்படும் ஹேர்கட் பண்ணலாம். நெற்றி முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்.

* குட்டை கழுத்து: குதிரைவால் கொண்டை பொருத்தும்.

* தாடை நீண்ட ஓவல் வடிவ முகம்: முடியை நோக்கி “சி” வடிவமான வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவதுபோல் அமையுங்கள் அழகாக, வித்தியாசமாக இருக்கும்.

நீளமான முடி:

* பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக அமையும்.

* ஃப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால் முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.

* முடியை தூக்கிவாரி கொண்டையின் மேல் ஃப்ரென்ச் நாட் போடலாம். கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டாலும் அழகுதான்.

* நீளக்கழுத்து: காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.

* மீடியம் கழுத்து: பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக தெரியும். கழத்தை ஒட்டி வகிடெடுத்து சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.

* மிக நீண்ட கழுத்து: கழுத்தை ஒட்டினர்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போண்ட கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.

* உருண்டைமுகம்: உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.

* ஓவல் முகம்: காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக்கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.

* சதுர முகம்: தளர ( காதை மூடிய பின்னல் ) , கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்கவிட மேலும் அழகாக இருக்கும். * குண்டானவர்கள்: கொண்டை வேண்டாம். பின்னல் நல்லது.

* உயரமானவர்கள்: கொண்டை வேண்டாம், ஆசையாக இருந்தால் சற்று தழைத்து போட்டுக் கொள்ளவும்.

* குள்ளமானவர்கள்: சற்று உயர தூக்கி கொண்டை போடுங்கள்.

* எல்லோருமே கொண்டைவலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை( ஓவராக அல்ல ) ஒட்டி வைத்துக்கொண்டால் விஷேங்களுக்கு செல்லும் போது உங்களை ரிச்சாக காட்டும். பாராட்டு கிடைக்கும்.

பொட்டு:

* உடைக்கேற்ற டிசைன் பொட்டு தே நிறத்திவ் தேர்ந்தெடுங்கள். பொதுவாக மெரூன் பொட்டு எல்லா உடைகளுக்கும் பொருந்தும்.

* உருண்டை முகம்: வட்டம், உயரம் என எல்லா பொட்டும் பொருந்தும். சிறிய நீட்டப் பொட்டு சூப்பராக இருக்கும்.

* குறுகிய நெற்றி: சிறிய டிசைன் பொட்டுகள் பொருந்தும்.

* நீளமுகம்: கலர் சாந்தினால் அகல டிசைன் வரைந்து கொள்ளலாம்.

* சதுர முகம், பரந்த நெற்றி: நீள டிசைன் பொட்டுகள் வைக்கலாம்.

* ஜீன்ஸ் அணிந்தால் கூட பாம்பு போன்ற வளைந்த, நீள டிசைன் பொட்டுகள் எடுப்பாக இருக்கும்.

பெண்கள் தங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற சிறிய ரோமங்களை நீக்க பெண்கள் தங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற சிறிய ரோமங்களை நீக்கினால் முக அழகு கூடும். அதற்கான அசத்தல் ஐடியா,

இதோ! முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை, சோளமாவு மூன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றையும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கிடைக்கும் கலவையை முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தில் பூசிக்கொள்ள வேண்டும். கலவை காய்ந்தபின் அதனை பதமாக நீக்க வேண்டும். அப்போது கலவையுடன் சேர்ந்து ரோமங்களும் உதிர்ந்துவிடும். தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை இப்படியே செய்துவந்தால் ரோமங்கள் இல்லாமல் சவழவழ முக அமைப்பை பெறலாம். நகத்துக்குச் சாயம்

நகங்களை நீளமாக வளர்ப்பதுதான் இன்றைய நாகரிகம் என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது. விரலின் விளிம்புக்கும் அதிகமாக நகங்களை வளரவிடுவது அவ்வளவு நல்லதல்ல. சாதாரணமாண எந்தவித வேலைக்கும் நீளமான நகங்கள் இடைஞ்சலாகவே இருக்கும். மேலும் அது பிய்ந்தும் உடைந்தும் தொல்லை தரும். நடுவில் பிரிந்து அல்லது அரைகுரையாக உடைந்து மூளியாகக் காட்சியளிக்கும் நகம் விரலின் அழகையே கெடுத்துவிடும்.

எனவே அதிகமாக நகம் வளர்க்காதீர்கள். நகம் வெட்டியை பயன்படுத்தி குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை வெட்டிவிடுங்கள். நகத்தை நீக்குவதற்கு பல்லால் கடிப்பதை தவிர்க்கவும். அது அசிங்கமான பழக்கம் என்பதை விட தேக நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

நகங்களுக்கு சாயம் பூசி அழகுபடுத்துவது தொன்று தொட்டு வரும் பழக்கமாகும். சாதாரணமாக நாம் இதற்கு மருதாணி இலைகளையே பயன்படுத்துகிறோம்.

மருதாணி அரைக்கும் போது நன்கு வெண்ணெய் போல் அரைப்பது சிறந்ததாகும்.
அப்போது அது நகங்களில் நன்றாக பற்றும். மருதாணி இலையை அரைக்கும் போது சிறிதளவு களிப்பாக்கை சேர்த்து அரைப்பது சாயம் நன்கு ஏற உதவும்.

விரல்களை நன்கு சுத்தம் செய்த பின்னரே அவற்றிற்கு அழகு செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

இது நகத்தில் சிவப்பு நன்கு ஏற உதவுவதோடு மருதாணி கலையாமல் இருக்க பயன்படும்.

நகங்களுக்குப் பூசிய பின்னர், உள்ளங்கைகளில் அழகிய வேலைபாடுகள் அடங்கிய, கவர்ச்சி பொருந்திய “டிசைன்களை” மருதாணியைக் கொண்டு இடலாம்.

உள்ளங்கை அளவே உள்ள அட்டைகளை எடுத்துக் கொள்ளவும். அதில் அழகான டிசைன்களை வரைந்து, நடுவில் வெட்டி எடுக்கவும்.

பின், டிசைன்கள் வெட்டப்பட்ட அட்டையை உள்ளங்கையில் வைத்து, அதன்மீது மருதாணி விழுதை நன்கு பரப்பி அதன் இலையை வைத்து கட்டிடவும்.

மறுநாள் மருதாணியை எடுத்துவிடும் போது கைகளில் அழகான டிசைன்கள் அமைந்து விடும். உள்ளங்கைகளைச் சுற்றிப் பொட்டுகள் வைப்பதும் உண்டு.

மருதாணியைத் தவிர, பலரகச் செயற்கைப் பூச்சுகளைப் பலர் உபயோகிப்பதுண்டு. சிவப்பில் பல ரகங்களில் இது கிடைக்கும் இயற்கை நிறத்திலும் உண்டு. இயற்கை நிற பூச்சு நகத்திற்கு தனி நிறம் கெடாது. ஒருவித பளபளப்பை மட்டும் உண்டு பண்ணி மெருகேற்றி விடுகிறது.

பொதுவாக இவ்வகை இயற்கை நிறப்பூச்சைப் பயன்படுத்தி நகங்களுக்கு பொலிவுபண்ணுவது ஆடம்பரமற்ற அமைதியான அழகை தரும்.

ஒவ்வொரு தடவையும் நகப்பூச்சை பயன்படுத்தும் போதும் பழைய பூச்சை அகற்றிவிடுவது மிகமிக அவசியம். காய்ந்த பழைய பூச்சை எடுத்துவிட கத்தியைக் கொண்டோ அல்லது வேறு ஏதும் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தியோ நகத்தை சுரண்டுவது நல்லதல்ல.

அதற்குறிய “பாலிஸ் ரிமூவரையே” பயன்படுத்த வேண்டும். பழைய பூச்சைக் களைந்து விரல்களை நன்கு சுத்தப்படுத்திப் பின்னர் திரும்பவும் பூசவும்.

கைகளுக்கு பயன்படும் இந்த பூச்சுகளே பாதங்களுக்கும் பயன்படக்கூடியவை.

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆடை அலங்காரம்

வீட்டுல் அணியும் உடைகள் பெண்கள் வீட்டில் இருக்கும் போது உடை அணியும் விஷயத்தில் அக்கறை செலுத்த வேண்டியது இல்லை என சில பெண்கள் நினைக்கிறார்கள். இது தவறான மனோபாவமாகும். வீட்டில் இருப்பவர்கள் நம்மை சார்ந்தவர்களாகவே இருப்பினும் வீட்டுச் சுழ்நிலைக்கு ஏற்ப உடை அணிவது வீட்டில் உள்ள ஆண்களுக்கு நிறைவாக இருக்கும். வீட்டில் இருக்கும் போது பகட்டாக உடை அணிவது தேவையில்லை என்றாலும் வீட்டிற்கு ஏற்ற மாதிரி பாந்தமாக உடை அணிவது அவசியமே.

அதிக உடையும் குறைந்த உடையும்

பெண்கள் பொதி சுமப்பது போல உடல் முழுவதும் சுற்றிய நிலையில் அதிகமான அளவில் உடை அணிவது அழகைக் கெடுக்கும். அதற்காக அங்கங்கள் தெரியும் அளவுக்கு மிகவும் குறைவான ஆடைகளை அணியக் கூடாது.

கடைத் தெருவுக்குப் போகும்போது

கடைத்தெரு மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது இலேசான நிறம் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது சுழ்நிலைக்கு ஏற்ப பாந்தமாக இருக்க வேண்டும்.

புடவைக்குப் பொருத்தமான சோளிகள்

பெண்கள் அணியக்கூடிய சோளிகளின் கைகளிலும், கழுத்திலும் லேஸ்களை வைத்துத் தைத்துக் கொண்டால் அவை என்ன வண்ணத்தில் புடவை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும்.

அலுவலகம் செல்லும் பெண்கள் அணியும் ஆடை

அலுவலங்களுக்கோ, பள்ளி, கல்லூரிகளுக்கோ செல்லும் பெண்கள் மிகவும் பகட்டாகவும் கண்களைப் பறிக்கும் விதத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ஒரேடியாக மோசமான ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என கருதிவிடக்கூடாது. கண்ணியமான தோற்றத்தை அளிக்கக்கூடிய சுழ்நிலைக்கு ஏற்ற உடையை அணிந்து செல்வது மிகவும் அவசியம்.

ஒல்லியான பெண்களுக்கு உடைகள்

மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது. சோளியின் கைகள்கூட மிகவும் பிடிப்பாக இல்லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது.

புடவையின் அமைப்பும் உருவத்தோற்றமும்

பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும்.
உதாரணமாக பெண்கள் அணியக்கூடிய புடவையில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் அமைந்தால் உயரமான பெண்கள் குள்ளமாக இருப்பது போன்ற பிரமைபார்பவர்களுக்கு தோன்றும். புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயராமாக இருப்பது போல காட்சி தருவார்கள்.

கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்றால்

கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது மிகவும் நெருக்கமாக கட்டம் போடப்பட்ட மிகவும் அழுத்தமான சாயம் கொண்ட கைத்தறி சேலைகளை உடுத்திச் சென்றால் பாந்தமாக இருக்கும்.

பெண்களுக்கு உடற்பயிற்சி


உடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது என்றே சொல்லலாம்.

நாம் அழகாகவே இல்லை,குண்டாக வேறு இருக்கிறோம். நம்மால் அழகாகத் தோற்றம் அளிக்க முடியாது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள், எப்போதுமே ‘ பாஸிடிவ் அப்ரோச்’ தான் எல்லாவற்றிலும் நல்ல பலனை அளிக்கும்.

நம் உடலில் எங்கெங்கு குறையிருக்கோ அதனை நாம் நமது உடற்பயிற்சியின் மூலமும்,மிதமான, அதே சமயம் நாகரிகமான ஒப்பனையின் மூலமும் நிவர்த்தி செய்ய இயலும்.

உடற்பயிற்சி செய்வதனால் அலைபாய்கிற மனம் ஓர் கட்டுக்குள் அடங்குகிறது.இரத்த ஓட்டம் சீராகி,புத்துணர்வு கிடைக்கிறது. உடற்பயிற்சியினால் உடல் கட்டுக்கோப்பாக ஆகிவிட்டாலே மகிழ்ச்சிதான்.இந்த மகிழ்ச்சி தன்னம்பிக்கையை அளித்து அழகூட்டுகிறது.

வியர்வை வெளிப்படுகிற மாதிரி பயிற்சி செய்தாலே முகம் பொலிவு பெற ஆரம்பித்து விடும்.

பயிற்சி செய்து விட்டு விட்டால் குண்டு பெண்மணி ஆகிவிடுவோம் என்று பயப்படும் அவசியம் இல்லை. என்ன இரண்டு கிலோ அதிகமாகும் அவ்வளவுதான்.மீண்டும் நீங்கள் தொடர்ந்தால் சரியாகி விடும்.

நமது உடல் வாகு, முகத்திற்கேற்ற தலையலங்காரம் ஒப்பனையில் சிறிது அக்கறை இருந்தாலே போதும் நாமும் அழகிதான். லிப்ஸ்டிக் கலர்,முகப்பவுடர் போன்றவை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

உடையைப் பொறுத்தவரை அனைவருக்குமே ‘ ட்ரெஸ்ஸிங் சென்ஸ் ‘ இருப்பது அவசியம்.அனைவருமே ஆடை வாங்குகிறார்கள்.உடுத்திக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு சிலரே ஆயிரம் பேருக்கு நடுவிலும் அழகு தேவதையாக வலம் வருவார்கள். காரணம் அவர்களிடம் அனைத்தையும் மீறிய ஒரு’ க்ரியேட்டிவ்சென்ஸ்’ இருக்கும்.அதுதான் அவர்களது ‘ஸ்பெஷாலிட்டியே’.

நம்மாலும் அந்த க்ரியேட்டிவிட்டியை வளர்த்துக் கொள்ள முடியும். எதற்குமே முயற்சிதான் காரணமாகிறது. முயற்சியுடையோர்… அதே தான்.

உயரமானவர்களுக்கு கட்டம் போட்டது போலும் , பெரிய பூக்களை உடையது போன்றும் உள்ள ஆடைகள் அழகான தோற்றத்தையும், மிதமான உயரமானவர்களுக்கு அவர்கள் நீண்ட வாகில் கோடுகள் போட்ட ஆடைகளைத் தேர்ந்தெடுப்பார்களேயானால் இன்னும் உயரமாக இருப்பது போன்ற தோற்றம் தரும்.

குள்ளமாக உள்ளவர்களுக்கு நீள வாக்கில் கோடு போட்டதும், சிறு சிறு பூக்களை உடைய ஆடையே அவர்களை உயரமாகக் காண்பிக்கும். குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் போட்டதற்கு முன்னுரிமை அளித்தல் அவர்கள் மிகவும் குள்ளமாகவும், குண்டாகவும் இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும்.

கலர் விஷயத்திலும் அப்படியே. கலராக இருப்பவர்களுக்கு லைட்,டார்க் என்று எந்த கலர் ஆடையை வேண்டுமானாலும் அவர்கள் கட்டி அசத்த முடியும்.

மாநிறமாகவும், கருப்பாகவும் உள்ளவர்கள் கலர் விஷயத்தில் கொஞ்சம் கவனம் வைக்க வேண்டும். மிகவும் டார்க் கலரையோ, மிகவும் லைட்டான கலரையோ தெரிவு செய்தல் கூடாது. மிதமான கலராகப் பார்த்து உடுத்தினால் அவர்களும் நல்ல நிறமாக தோற்றம் அளிக்க இயலும்.

உயரமானவர்கள் மெல்லிய ஸ்லிப்பரும், குள்ளமானவர்கள் ஓரளவு ஹீல்ஸ் உள்ள செருப்பையும் அணியலாம். அதிகப்படியான ஹீல்ஸ் முதுகு வலி,இடுப்பு வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தி விட்டு விடும்.

மளிகை சாமான்களின் ஆங்கிலபெயர்

அவரை – Beans – பீன்ஸ்

இஞ்சி – Ginger – ஜின்ஜர்

உப்பு – Salt – ஸால்ட்

உளுந்து – Black Gram – பிளாக் கிராம்

பூண்டு – Garlic – கார்லிக்

எண்ணெய் – Oil – ஆயில்

ஏலக்காய் – Cardamom – கார்டாமாம்

கசகசா – Poppy – பாப்பி

கடலை – Bengal Gram – பெங்கால் கிராம்

கடுகு – Mustard – முஸ்டார்ட்

கம்பு – Millet – மில்லட்

கஸ்தூரி – Musk – மஸ்க்

குங்குமப்பூ – Saffron – சஃப்ரான்

கேழ்வரகு – Ragi – ராகி

கொள்ளு – Horse Gram – ஹார்ஸ் கிராம்

கோதுமை – Wheat – வீட்

சீரகம் – Cumin – குமின்

தனியா – Coriander – கோரியண்டர்

தயிர் – Curd – க்கார்ட்

துவரை – Red Gram – ரெட்கிராம்

கடலை எண்ணெய் – Gram Oil – கிராம் ஆயில்

தேங்காய் எண்ணெய் – Cocoanut Oil – கோக்கநட் ஆயில்

நல்லெண்ணெய் – Gingili Oil – ஜின்ஜிலி ஆயில்

நெய் – Ghee – கீ

நெல் – Paddy – பாடி

அரிசி – Rice – ரய்ஸ்

பச்சைப்பயறு – Green Gram – கீரின் கிராம்

பாசிப்பருப்பு – Moong Dal – மூனிங் தால்

கடலைப்பருப்பு – Gram Dal – கிராம் தால்

பன்னீர் – Rose Water – ரோஸ் வாட்டர்

பால் – Milk – மில்க்

பால்கட்டி – Cheese – ச்சீஸ்

புளி – Tamarind – டாமரிண்ட்

பெருங்காயம் – Asafoetida – அசஃபோய்டைடா

மக்காச்சோளம் – Maize – மெய்ஸ்

மஞ்சள் – Turmeric – டர்மரிக்

மிளகாய் – Chillies – சில்லிஸ்

மிளகு – Pepper – பெப்பர்

மோர் – Butter Milk – பட்டர் மில்க்

லவங்கம் – Cloves – க்லெளவ்ஸ்

வெங்காயம் – Onion – ஆனியன்

வெண்ணெய் – Butter – பட்டர்

வெல்லம் – Jaggery – ஜாக்கரீ

ஜாதிக்காய் – Nutmeg – நட்மெக்

ஜாதிபத்திரி – Mace – மெக்

வாற்கோதுமை – Barley – பார்லி

சர்க்கரை – Sugar – ஸுகர்

முந்திரிப் பருப்பு தொக்கு

இது மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும். நீங்களும் செய்து பாருங்கள். இதனுடன் அனைத்து சாத வகைகளையும் சேர்த்து சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள்:

கடுகு – 1ஸ்பூன்

கறிவேப்பிலை – 1கொத்து

சின்ன வெங்காயம் – 1கப் பொடியாக நறுக்கியது

தக்காளி – 1கப் பொடியாக நறுக்கியது

முந்திரி – 2கப்

தேங்காய் பால் – 1கப்

கொத்தமல்லி தழை – 1/4கப்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு:-

கசகசா – 2ஸ்பூன்

தனியா – 4ஸ்பூன்

பட்டை,கிராம்பு – 5நம்பர்

காய்ந்த மிளகாய் – 5நம்பர்

இஞ்சி – 1ஸ்பூன்

பூண்டு – 2ஸ்பூன்

வெங்காயம் – 1ஸ்பூன்

முந்திரி – 4ஸ்பூன்

தேங்காய் – 1கப் துருவியது

மஞ்சள் தூள் – 1/2ஸ்பூன்

செய்முறை:-

அரைக்க வேண்டிய பொருள்களில் முதலில் கசகசா, தனியா எண்ணெய்யில்லாம் வறுக்கவும். அதனுடன் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, காய்ந்த மிளகாய், முந்திரி, இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்பு மிக்ஸியில் இக்கலவையுடன் தேங்காய் துருவல், மஞ்சள் தூள் சேர்த்து மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 5ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகை சேர்த்து வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கியதும் தக்காளி, முந்திரி சேர்த்து வதக்கவும்.

பின்பு அதனுடன் தேங்காய் பாலையும் அரைத்த கலவையும் தேவையான உப்பையும் சேர்த்து 5நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.

நன்கு கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு மேலாக கொத்தமல்லி தழைகளை தூவவும்.

சுவையான முந்திரிப் பருப்பு தொக்கு தயார்.

பூரி

இந்த பூரி ருசியாகவும் முறுமுறுப்பாகவும் இருக்கும். எளிதிலும் செய்து விடலாம். ஆறினாலும் நன்றாக இருக்கும். இதற்கு பூரி மசாலா சேர்த்து சாப்பிடலாம். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:-

மைதாமாவு அல்லது கோதுமை மாவு – 3 கப்

சோளமாவு – 1/4கப்

காய வைத்த பால் – தேவையான அளவு

ரவை – 5ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

  • முதலில் வாய் அகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, சோளமாவு, ரவை, உப்பு, எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • தண்ணீருக்கு பதிலாக காய வைத்த பாலை அதில் தேவையான அளவு ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • பிசைந்த மாவை 1மணிநேரம் ஊற விடவும்.
  • பின்பு ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்திகல்லில் சிறிது மைதா மாவை தூவி மாவையை வைத்து மிகவும் லேசாகவும் கனமாகவும் இல்லாமல் நடுத்தரமாக தேய்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதே போல் அனைத்து உருண்டைகளையும் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்த சப்பாத்தியை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனை குறைந்த தணலில் செய்தால் மிகவும் அருமையாக இருக்கும். தேவையான போது எடுத்து பரிமாறவும்.
  • சுவையான பூரி தயார்.

பருப்பு உருண்டை குழம்பு

இது மிகவும் சுவையாக இருக்கும். எளிதிலும் செய்து விடலாம். இதனை சாம்பார் சாதம், தயிர் சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:-

துவரம் பருப்பு – 1/4 கப்

கடலைப்பருப்பு – 1/4 கப்

பாசிப்பருப்பு – 1/4 கப்

தேங்காய் துருவல் – 1/2கப்

சோம்பு – 2ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 1கப் பொடியாக நறுக்கியது

தக்காளி – 1கப் பொடியாக நறுக்கியது

பச்சைமிளகாய் – 3நம்பர் பொடியாக நறுக்கியது

இஞ்சி, பூண்டு விழுது – 2ஸ்பூன்

கொத்தமல்லி தழை – 1/2கப்

கருவேப்பிலை – 1கொத்து

சாம்பார் தூள் – 2ஸ்பூன்

புளித்தண்ணீர் – 1/2 கப்

பெருங்காய்த் தூள் – 1/4ஸ்பூன்

கசகசா – 1ஸ்பூன்

வெந்தயம் – 1ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

தண்னீர் – தேவையான அளவு

செய்முறை:-

  • பருப்பு வகைகளை 1மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சோம்பை சேர்த்து ஒன்னும் பாதியுமாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்பு அதனை பாத்திரத்தில் எடுத்து அதனுடன் சிறிது வெங்காயம், சிறிது பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சிறிது கொத்தமல்லிதழை , உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வடை பதத்தற்கு கலந்து கொள்ளவும்.
  • பின்பு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடாக்கி இட்லி தட்டில் கலந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து தனியே எடுத்துக் கொள்ளவும். ( உருட்டிய உருண்டைகளை எண்ணெய்யிலும் பொரித்துக் கொள்ளலாம்.)
  • தேங்காய், வெங்காயம், கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் மைபோல் அரைத்துவைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெந்தயம்,பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து சிவக்க வறுக்கவும். நன்கு வறுத்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பொன்நிறம் மாறும் வரை வதக்கவும்.
  • நன்கு வதக்கியவுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில் புளித்தண்ணீர், சாம்பார் தூள், அரைத்த மசாலா, சிறிது தண்ணீர் உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்த வுடன் வெந்த உருண்டைகளை அதில் சேர்த்து 1கொதி வந்தவுடன் கீழே இறக்கி மேலாக கொத்தமல்லி தழையை தூவவும். தேவைப்படும் போது எடுத்து பரிமாறவும்.
  • சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார்.

இந்த குழம்பில் உருண்டைகளாக போடாமல் உதிர்த்து விட்டு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கினால் சுவையான வடைக்கறி ரெடி.